குணங்காணும் குறி

bookmark

கற்றோர்கள் என்பதைச் சீலமுட னேசொலும் 
      கனவாக்கி னாற்கா ணலாம்; 
கற்புளார் என்பதைப் பார்க்கின்ற பார்வையொடு 
      கால்நடையி னும்கா ணலாம்; 
அற்றோர்கள் என்பதை ஒன்றினும் வாரா 
      அடக்கத்தி னால்அ றியலாம்; 
அறமுளோர் என்பதைப் பூததயை யென்னும்நிலை 
      யதுகண்டு தான் அறியலாம்; 
வித்தோங்கு பயிரைக் கிளைத்துவரு துடியினால்
      விளையும்என் றேஅ றியலாம்; 
வீரம்உடை யோரென்ப தோங்கிவரு தைரிய 
      விசேடத்தி னால்அ றியலாம்; 
அத்தா! குணத்தினாற் குலநலம் தெரியலாம் 
      அண்ணலே! அருமை மதவேள் 
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் 
      அறப்பளீ சுரதே வனே!
-----------