குணங்காணும் குறி

கற்றோர்கள் என்பதைச் சீலமுட னேசொலும்
கனவாக்கி னாற்கா ணலாம்;
கற்புளார் என்பதைப் பார்க்கின்ற பார்வையொடு
கால்நடையி னும்கா ணலாம்;
அற்றோர்கள் என்பதை ஒன்றினும் வாரா
அடக்கத்தி னால்அ றியலாம்;
அறமுளோர் என்பதைப் பூததயை யென்னும்நிலை
யதுகண்டு தான் அறியலாம்;
வித்தோங்கு பயிரைக் கிளைத்துவரு துடியினால்
விளையும்என் றேஅ றியலாம்;
வீரம்உடை யோரென்ப தோங்கிவரு தைரிய
விசேடத்தி னால்அ றியலாம்;
அத்தா! குணத்தினாற் குலநலம் தெரியலாம்
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
-----------