கூடிற் பயன்படல்

செத்தைபல கூடியொரு கயிறாயின் அதுகொண்டு
திண்கரியை யும்கட் டலாம்!
திகழ்ந்தபல துளிகூடி ஆறாயின் வாவியொடு
திரள்ஏறி நிறைவிக் கலாம்!
ஒத்தநுண் பஞ்சுபல சேர்ந்துநூல் ஆயிடின்
உடுத்திடும் கலைஆக் கலாம்!
ஓங்கிவரு கோலுடன் சீலையும் கூடினால்
உயர்கவிகை யாக்கொள் ளலாம்!
மற்றும்உயர் தண்டுலத் தோடுதவி டுமிகூடின்
மல்கும்முளை விளைவிக் கலாம்!
மனமொத்த நேயமொடு கூடியொருவர்க்கொருவர்
வாழின்வெகு வெற்றி பெறலாம்!
அற்றகனி யைப்பொருத் தரிபிரமர் தேடரிய
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
--------------