வெற்றி யிடம்

கலைவலா ருக்கதிக சயம் மதுரவாக்கிலே;
காமுகர்க் கதிக சயமோ
கைப்பொருளி லே;வரும் மருத்துவர்க் கோசயம்
கைவிசே டந்தன் னிலே;
நலமுடைய வேசையர்க் கழகிலே! அரசர்க்கு
நாளும்ரண சூரத் திலே
நற்றவர்க் கதிகசயம் உலகுபுகழ் பொறையிலே;
ஞானவே தியர்த மக்கோ
குலமகிமை தன்னிலே; வைசியர்க் கோசயம்
1கூடிய துலாக்கோ லிலே;
குற்றம் இல்லாதவே ளாளருக் கோசயம்
குறையாத கொழுமு னையிலே;
அலைவில்குதி ரைக்குநடை வேகத்தில் அதிகசயம்
ஆம்என்பர்; அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
-----------