இதற்கு இது வேண்டும்

bookmark

தனக்குவெகு புத்தியுண் டாகினும் வேறொருவர் 
      தம்புத்தி கேட்க வேண்டும்; 
தான்அதிக சூரனே ஆகினும் கூடவே 
      தளசேக ரங்கள் வேண்டும்; 
கனக்கின்ற வித்துவான் ஆகினும் தன்னினும் 
      கற்றோரை நத்த வேண்டும்; 
காசினியை ஒருகுடையில் ஆண்டாலும் வாசலிற் 
      கருத்துள்ள மந்த்ரி வேண்டும்; 
தொனிக்கின்ற சங்கீத சாமர்த்தியன் ஆகினும் 
      சுதிகூட்ட ஒருவன் வேண்டும்; 
சுடர்விளக்கு ஆயினும் நன்றாய் விளங்கிடத் 
      தூண்டுகோல் ஒன்று வேண்டும்;
அனற்கண்ண னே!படிக சங்கம்நிகர் வண்ணனே! 
      ஐயனே! அருமை மதவேள் 
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் 
      அறப்பளீ சுரதே வனே!
---------------