இதற்கு இது வேண்டும்

தனக்குவெகு புத்தியுண் டாகினும் வேறொருவர்
தம்புத்தி கேட்க வேண்டும்;
தான்அதிக சூரனே ஆகினும் கூடவே
தளசேக ரங்கள் வேண்டும்;
கனக்கின்ற வித்துவான் ஆகினும் தன்னினும்
கற்றோரை நத்த வேண்டும்;
காசினியை ஒருகுடையில் ஆண்டாலும் வாசலிற்
கருத்துள்ள மந்த்ரி வேண்டும்;
தொனிக்கின்ற சங்கீத சாமர்த்தியன் ஆகினும்
சுதிகூட்ட ஒருவன் வேண்டும்;
சுடர்விளக்கு ஆயினும் நன்றாய் விளங்கிடத்
தூண்டுகோல் ஒன்று வேண்டும்;
அனற்கண்ண னே!படிக சங்கம்நிகர் வண்ணனே!
ஐயனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
---------------