மறைவும் வெளிப்படையும்

bookmark

சென்மித்த வருடமும், உண்டான அத்தமும், 
      தீதில்கிர கச்சா ரமும், 
தின்றுவரும் அவுடதமும், மேலான தேசிகன் 
      செப்பிய மகாமந்த் ரமும், 
புன்மையவ மானமும், தானமும், பைம்பொன்அணி 
      புனையும்மட வார்க லவியும், 
புகழ்மேவும் மானமும், இவைஒன்ப தும்தமது 
      புந்திக்கு ளேவைப் பதே 
தன்மமென் றுரைசெய்வர்; ஒன்னார் கருத்தையும்
      தன்பிணியை யும்ப சியையும், 
தான்செய்த பாவமும், இவையெலாம் வேறொருவர் 
      தஞ்செவியில் வைப்ப தியல்பாம்! 
அன்மருவு கண்டனே! மூன்றுலகும் ஈன்றவுமை 
      அன்பனே! அருமை மதவேள் 
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் 
      அறப்பளீ சுரதே வனே!
------------