
சாகசம் காட்டும் கடல் கன்னிகள்.. கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்.

ஹாய் சுட்டிஸ், எல்லாரும் எப்படி இருக்கீங்க.. விடுமுறை முடிய போகுதுனு கவலையா இருக்கீங்களா, இல்ல நண்பர்களை பாக்க போறோம்னு ஹாப்பியா இருக்கீங்களா. சரி இந்த வாரம் என்ன கதை படிக்க போறோம்னு தெரியுமா, சொல்றேன் வாங்க.
ஒரு அழகான தீவு இருந்தது. அதன் பெயர் ஹாம்பிஸ். மிகவும் அருமையான அந்த தீவின் அடியில் சில கடல் ராஜ்ஜியங்கள் இருந்தன. ஒவ்வொரு ராஜ்யங்களிலும் கடல் வாழ் உயிரினங்கள் இருந்தன. அங்கு மெர்மைட்களும் வாழ்ந்து வந்தன. இதில் 5 நண்பர்கள் மிகவும் துறு துறுன்னு இருந்தார்கள். அதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருந்தது. இவர்கள் அடிக்கடி கடலை விட்டு வெளியே வந்து மற்ற கடல்கள், தீவுகள் என சுற்றி வருவார்கள்
அவர்கள் சென்ற இடங்களில் எல்லாம் எதாவது அட்வென்சர் நடக்கும். அப்படித்தானே ஒருநாள் அருகில் உள்ள ராஜ்யத்தில் அவர்களது தோழியான ஏரியலை பார்க்க செல்லலாம் என முடிவெடுத்தார்கள். அவர்கள் ராஜ்யத்தில் இருந்து புறப்பட்டு சென்று கொண்டிருக்கும் போது மிக பெரிய அலை வந்தது. அந்த அலையை கண்டதும் மரீனா சந்தோஷத்தில் துள்ளி குதித்து கடலின் மேற்பகுதிக்கு சென்றாள்.
மற்றவர்கள் அவளை தடுத்தனர். போகாதே மரீனா அது மிகவும் கடினமான அலையாக தெரிகிறது என்று அழைத்தும் காதில் வாங்காமல் சென்றாள். தோழியாயிற்றே தனியே விட முடியாமல் அவர்களும் ஆபத்து என தெரிந்தே பின் சென்றார்கள்.
அலையின் ஆக்ரோஷம் அதிகமாக இருந்ததால் அவர்கள் அலையில் அடித்து செல்ல பட்டார்கள். ஒரு இருட்டான ஆழமான பள்ளத்தாக்கு போல் இருந்தது. அவர்கள் அங்கு மயங்கி விழுந்து கிடந்தனர். மயக்கம் தெரியவே முழித்து பார்த்தால் அந்த இடம் மிகவும் விசித்தமாக இருந்தது. அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. இவர்கள் அனைவரும் பல கடல்களை தாண்டி பயணித்துள்ளார்கள். ஆனாலும் இது அவர்களுக்கு ஒரு சவாலான பகுதியாக இருந்தது. அவர்கள் நீந்தி கொண்டே அங்கு இருக்கும் இடங்களை பார்வையிட்டார்கள்.
அக்வா, அதனிடம் ஏன் அழுகிறாய் என்னவாயிற்று என்று கேட்டாள். அதற்கு குட்டி கடல் குதிரை என் பெயர் பபிள்ஸ், எங்கள் ராஜ்யம் மிகவும் அழகாக இருந்தது. இங்கு ஒரு மரகத நாணயம் இருந்தது. அதன் ஒளியால் தன எங்கள் ராஜ்ஜியமே ஜொலித்தது. ஆக்டோபஸ் வடிவில் இருந்த அந்த கடல் சூனியக்காரி அதை திருடி சென்று விட்டாள். அவளிடம் இருந்து எங்கள் ராஜ்ஜியத்தை மீட்க முடியவில்லை. தயவு செய்து உதவுங்கள் என்று சொன்னது. அவர்களும் பபிள்ஸ் இடம் எங்களுக்கு வழியை காட்டு என்று சொன்னார்கள். அதுவும் அவர்களை அந்த இடத்திற்கு கூடி சென்றத.
அது ஒரு குகை போன்று இருந்தது. அதை அவர்களால் திறக்க முடியவில்லை. அருகில் லிவர் போல இருந்ததை லைலா இழுத்தாள்.அந்த கத கதவு சிறிதுதான் திறந்தது. மரீனா சட்டென உள்ளே நுழைந்தாள். உள்ளே இருந்த இன்னொரு லிவரை இழுத்தாள் அது திறந்தது. அந்த குகை பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்தது. இன்னொரு கதவு இருந்தது. அது மிகவும் கடினமாக இருந்தது. அதை உடைத்து தான் செல்ல வேண்டும் என்பது போல் இருந்தது. டெல்ஃபீன் அதை ஒரே மிதியில் உடைத்தாள். அனைவரும் நீந்தி உள்ளே சென்றார்கள். அந்த கொடிய சூனியக்காரி அந்த மரகத நாணயம் அருகில் படுத்து பாட்டு படி கொண்டிருந்தாள். இவர்கள் வருவதை முன்கூட்டியே உணர்ந்து விட்டாள் அவள்.
அவளிடம் 5 பேரும் சண்டையிட்டார்கள். இறுதியில் மரகத நாணயத்தி எடுத்து கொண்டு ராஜ்யத்தை நோக்கி புறப்பட்டார்கள். அதன் சரியான இடத்தில அதை பொருத்தினார்கள். ராஜ்ஜியத்தின் தலைமை அதிகாரி, இந்த ராஜ்யமே உங்களுக்கு கடமை பட்டுள்ளது. இன்று போல் எப்போதும் ஒற்றுமையாக இருங்கள். அதுவேய உங்கள் பலம் என்றார். அவர்களும் புறப்பட்டு அவர்கள் தோழியான ஏரியலை பார்க்க சென்றார்கள்.