திருவேகம்பம் - திருவிருத்தம்

bookmark

திருச்சிற்றம்பலம்

956

ஓதுவித் தாய்முன் அறவுரை

காட்டி அமணரொடே
காதுவித் தாய்கட்ட நோய்பிணி

தீர்த்தாய் கலந்தருளிப்
போதுவித் தாய்நின் பணிபிழைக்

கிற்புளி யம்வளாரால்
மோதுவிப் பாய்உகப் பாய்முனி

வாய்கச்சி யேகம்பனே.

4.100.1

957

எத்தைக்கொண் டெத்தகை ஏழை

அமணொ டிசைவித்தெனைக்
கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டு

வித்தென்னைக் கோகுசெய்தாய்
முத்தின் திரளும் பளிங்கினிற்

சோதியும் மொய்பவளத்
தொத்தினை யேய்க்கும் படியாய்

பொழிற்கச்சி யேகம்பனே.

4.100.2

958

மெய்யம்பு கோத்த விசயனோ

டன்றொரு வேடுவனாய்ப்
பொய்யம்பெய் தாவ மருளிச்செய்

தாய்புர மூன்றெரியக்
கையம்பெய் தாய்நுன் கழலடி

போற்றாக் கயவர்நெஞ்சிற்
குய்யம்பெய் தாய்கொடி மாமதில்

சூழ்கச்சி யேகம்பனே.

4.100.3

959

குறிக்கொண் டிருந்துசெந் தாமரை

ஆயிரம் வைகல்வைகல்
நெறிப்பட இண்டை புனைகின்ற

மாலை நிறையழிப்பான்
கறைக்கண்ட நீயொரு பூக்குறை

வித்துக்கண் சூல்விப்பதே
பிறைத்துண்ட வார்சடை யாய்பெருங்

காஞ்சியெம் பிஞ்ஞகனே.

4.100.4

960

உரைக்குங் கழிந்திங் குணர்வரி

யான்உள்கு வார்வினையைக்
கரைக்கு மெனக்கை தொழுவதல்

லாற்கதி ரோர்களெல்லாம்
விரைக்கொண் மலரவன் மால்எண்

வசுக்கள்ஏ காதசர்கள்
இரைக்கும் அமிர்தர்க் கறியவொண்

ணானெங்கள் ஏகம்பனே.

4.100.5

961

கருவுற்ற நாள்முத லாகவுன்

பாதமே காண்பதற்கு
உருகிற்றென் னுள்ளமும் நானுங்

கிடந்தலந் தெய்த்தொழிந்தேன்
திருவொற்றி யூரா திருவால

வாயா திருவாரூரா
ஒருபற் றிலாமையுங் கண்டிரங்

காய்கச்சி யேகம்பனே.

4.100.6

962

அரிஅயன் இந்திரன் சந்திரா

தித்தர் அமரரெல்லாம்
உரியநின் கொற்றக் கடைத்தலை

யார்உணங் காக்கிடந்தார்
புரிதரு புன்சடைப் போக

முனிவர் புலம்புகின்றார்
எரிதரு செஞ்சடை ஏகம்ப

என்னோ திருக்குறிப்பே.

4.100.7

963

பாம்பரைச் சேர்த்திப் படருஞ்

சடைமுடிப் பால்வண்ணனே
கூம்பலைச் செய்த கரதலத்

தன்பர்கள் கூடிப்பன்னாள்
சாம்பலைப் பூசித் தரையிற்

புரண்டுநின் றாள்சரணென்
றேம்பலிப் பார்கட் கிரங்குகண்

டாய்கச்சி யேகம்பனே.

4.100.8

964

ஏன்றுகொண் டாயென்னை எம்பெரு

மானினி யல்லமென்னிற்
சான்றுகண் டாய்இவ் வுலகமெல்

லாந்தனி யேனென்றென்னை
ஊன்றிநின் றாரைவர்க் கொற்றிவைத்

தாய்பின்னை ஒற்றியெல்லாஞ்
சோன்றுகொண் டாய்கச்சி யேகம்ப

மேய சுடர்வண்ணனே.

4.100.9

965

உந்திநின் றாருன்றன் ஓலக்கச்

சூளைகள் வாய்தல்பற்றித்
துன்றிநின் றார்தொல்லை வானவ

ரீட்டம் பணியறிவான்
வந்துநின் றாரய னுந்திரு

மாலும் மதிற்கச்சியாய்
இந்தநின் றோமினி எங்ஙன

மோவந் திறைஞ்சுவதே.

4.100.10

திருச்சிற்றம்பலம்