திருவாரூர் - திருவிருத்தம்

bookmark

திருச்சிற்றம்பலம்

976

குலம்பலம் பாவரு குண்டர்முன்

னேநமக் குண்டுகொலோ
அலம்பலம் பாவரு தண்புனல்

ஆரூர் அவிர்சடையான்
சிலம்பலம் பாவரு சேவடி

யான்றிரு மூலத்தானம்
புலம்பலம் பாவரு தொண்டர்க்குத்

தொண்டராம் புண்ணியமே.

4.102.1

977

மற்றிட மின்றி மனைதுறந்

தல்லுணா வல்லமணர்
சொற்றிட மென்று துரிசுபட்

டேனுக்கு முண்டுகொலோ
விற்றிடம் வாங்கி விசயனோ

டன்றொரு வேடுவனாய்ப்
புற்றிடங் கொண்டான்றன் தொண்டர்க்குத்

தொண்டராம் புண்ணியமே.

4.102.2

978

ஒருவடி வின்றிநின் றுண்குண்டர்

முன்னமக் குண்டுகொலோ
செருவடி வெஞ்சிலை யாற்புரம்

அட்டவன் சென்றடையாத்
திருவுடை யான்றிரு வாரூர்த்

திருமூலத் தானன்செங்கட்
பொருவிடை யானடித் தொண்டர்க்குத்

தொண்டராம் புண்ணியமே.

4.102.3

979

மாசினை யேறிய மேனியர்

வன்கண்ணர் மொண்ணரைவிட்
டீசனை யேநினைந் தேசறு

வேனுக்கும் உண்டுகொலோ
தேசனை ஆரூர்த் திருமூலத்

தானனைச் சிந்தைசெய்து
பூசனைப் பூசரர் தொண்டர்க்குத்

தொண்டராம் புண்ணியமே.

4.102.4

980

அருந்தும் பொழுதுரை யாடா

அமணர் திறமகன்று
வருந்தி நினைந்தர னேயென்று

வாழ்த்துவேற் குண்டுகொலோ
திருந்திய மாமதில் ஆரூர்த்

திருமூலத் தானனுக்குப்
பொருந்துந் தவமுடைத் தொண்டர்க்குத்

தொண்டராம் புண்ணியமே.

4.102.5

981

வீங்கிய தோள்களுந் தாள்களு

மாய்நின்று வெற்றரையே
மூங்கைகள் போலுண்ணு மூடர்முன்

னேநமக் குண்டுகொலோ
தேங்கமழ் சோலைத்தென் னாரூர்த்

திருமூலத் தானன்செய்ய
பூங்கழ லானடித் தொண்டர்க்குத்

தொண்டராம் புண்ணியமே.

4.102.6

982

பண்ணிய சாத்திரப் பேய்கள்

பறிதலைக் குண்டரைவிட்
டெண்ணிற் புகழீசன் றன்னருள்

பெற்றேற்கு முண்டுகொலோ
திண்ணிய மாமதில் ஆரூர்த்

திருமூலத் தானனெங்கள்
புண்ணியன் றன்னடித் தொண்டர்க்குத்

தொண்டராம் புண்ணியமே.

4.102.7

983

கரப்பர்கள் மெய்யைத் தலைபறிக்

கச்சுகம் என்னுங்குண்டர்
உரைப்பன கேளாதிங் குய்யப்போந்

தேனுக்கும் உண்டுகொலோ
திருப்பொலி ஆரூர்த் திருமூலத்

தானன் திருக்கயிலைப்
பொருப்பன் விருப்பமர் தொண்டர்க்குத்

தொண்டராம் புண்ணியமே.

4.102.8

984

கையி லிடுசோறு நின்றுண்ணுங்

காதல் அமணரைவிட்
டுய்யும் நெறிகண் டிங்குய்யப்

போந்தேனுக்கு முண்டுகொலோ
ஐயன் அணிவயல் ஆரூர்த்

திருமூலத் தானனுக்குப்
பொய்யன் பிலாவடித் தொண்டர்க்குத்

தொண்டராம் புண்ணியமே.

4.102.9

985

குற்ற முடைய அமணர்

திறமது கையகன்றிட்
டுற்ற கருமஞ்செய் துய்யப்போந்

தேனுக்கும் உண்டுகொலோ
மற்பொலி தோளான் இராவணன்

றன்வலி வாட்டுவித்த
பொற்கழ லானடித் தொண்டர்க்குத்

தொண்டராம் புண்ணியமே.

4.102.10

திருச்சிற்றம்பலம்