திருநாகைக்காரோணம் - திருவிருத்தம்

bookmark

திருச்சிற்றம்பலம்

993

வடிவுடை மாமலை மங்கைபங்

காகங்கை வார்சடையாய்
கடிகமழ் சோலை சுலவு

கடல்நாகைக் காரோணனே
பிடிமத வாரணம் பேணுந்

துரகநிற் கப்பெரிய
இடிகுரல் வெள்ளெரு தேறுமி

தென்னைகொல் எம்மிறையே.

4.104.1

994

கற்றார் பயில்கடல் நாகைக்கா

ரோணத்தெங் கண்ணுதலே
விற்றாங் கியகரம் வேல்நெடுங்

கண்ணி வியன்கரமே
நற்றாள் நெடுஞ்சிலை நாண்வலித்

தகர நின்கரமே
செற்றார் புரஞ்செற்ற சேவக

மென்னைகொல் செப்புமினே.

4.104.2

995

தூமென் மலர்க்கணை கோத்துத்தீ

வேள்வி தொழிற்படுத்த
காமன் பொடிபடக் காய்ந்த

கடல்நாகைக் காரோணநின்
நாமம் பரவி நமச்சிவா

யவென்னும் அஞ்செழுத்துஞ்
சாமன் றுரைக்கத் தருதிகண்

டாயெங்கள் சங்கரனே.

4.104.3

996

பழிவழி யோடிய பாவிப்

பறிதலைக் குண்டர்தங்கள்
மொழிவழி யோடி முடிவேன்

முடியாமைக் காத்துக்கொண்டாய்
கழிவழி யோதம் உலவு

கடல்நாகைக் காரோணவென்
வழிவழி யாளாகும் வண்ணம்

அருளெங்கள் வானவனே.

4.104.4

997

செந்துவர் வாய்க்கருங் கண்ணிணை

வெண்ணகைத் தேமொழியார்
வந்து வலஞ்செய்து மாநட

மாட மலிந்தசெல்வக்
கந்த மலிபொழில் சூழ்கடல்

நாகைக்கா ரோணமென்றுஞ்
சிந்தைசெய் வாரைப் பிரியா

திருக்குந் திருமங்கையே.

4.104.5

998

பனைபுரை கைம்மத யானை

யுரித்த பரஞ்சுடரே
கனைகடல் சூழ்தரு நாகைக்கா

ரோணத்தெங் கண்ணுதலே
மனைதுறந் தல்லுணா வல்லமண்

குண்டர் மயக்கைநீக்கி
எனைநினைந் தாட்கொண்டாய்க் கென்னினி

யான்செயும் இச்சைகளே.

4.104.6

999

சீர்மலி செல்வம் பெரிதுடை

யசெம்பொன் மாமலையே
கார்மலி சோலை சுலவு

கடல்நாகைக் காரோணனே
வார்மலி மென்முலை யார்பலி

வந்திடச் சென்றிரந்து
ஊர்மலி பிச்சைகொண் டுண்பது

மாதிமை யோவுரையே.

4.104.7

1000

வங்கம் மலிகடல் நாகைக்கா

ரோணத்தெம் வானவனே
எங்கள் பெருமானோர் விண்ணப்பம்

உண்டது கேட்டருளீர்
கங்கை சடையுட் கரந்தாயக்

கள்ளத்தை மெள்ளவுமை
நங்கை அறியிற்பொல் லாதுகண்டா

யெங்கள் நாயகனே.

4.104.8

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் மறைந்து போயிற்று.

4.104.9

1001

கருந்தடங் கண்ணியுந் தானுங்

கடல்நாகைக் காரோணத்தான்
இருந்த திருமலை யென்றிறைஞ்

சாதன் றெடுக்கலுற்றான்
பெருந்தலை பத்தும் இருபது

தோளும் பிதிர்ந்தலற
இருந்தரு ளிச்செய்த தேமற்றுச்

செய்திலன் எம்மிறையே.

4.104.10

திருச்சிற்றம்பலம்