திருவதிகைவீரட்டானம் - திருவிருத்தம்

bookmark

திருச்சிற்றம்பலம்

1002

மாசிலொள் வாள்போல் மறியும்

மணிநீர்த் திரைத்தொகுதி
ஊசலை யாடியங் கொண்சிறை

அன்னம் உறங்கலுற்றால்
பாசறை நீலம் பருகிய

வண்டுபண் பாடல்கண்டு
வீசுங் கெடில வடகரைத்

தேயெந்தை வீரட்டமே.

4.105.1

1003

பைங்காற் றவளை பறைகொட்டப்

பாசிலை நீர்ப்படுகர்
அங்காற் குவளைமேல் ஆவி

உயிர்ப்ப அருகுலவுஞ்
செங்காற் குருகிவை சேருஞ்

செறிகெடி லக்கரைத்தே
வெங்காற் குருசிலை வீரன்

அருள்வைத்த வீரட்டமே.

4.105.2

1004

அம்மலர்க் கண்ணியர் அஞ்சனஞ்

செந்துவர் வாயிளையார்
வெம்முலைச் சாந்தம் விலைபெறு

மாலை யெடுத்தவர்கள்
தம்மருங் கிற்கிரங் கார்தடந்

தோள்மெலி யக்குடைவார்
விம்மு புனற்கெடி லக்கரைத்

தேயெந்தை வீரட்டமே.

4.105.3

1005

மீனுடைத் தண்புனல் வீரட்ட

ரேநும்மை வேண்டுகின்ற
தியானுடைச் சில்குறை ஒன்றுள

தால்நறுந் தண்ணெருக்கின்
தேனுடைக் கொன்றைச் சடையுடைக்

கங்கைத் திரைதவழுங்
கூனுடைத் திங்கட் குழவியெப்

போதுங் குறிக்கொண்மினே.

4.105.4

1006

ஆரட்ட தேனும் இரந்துண்

டகமக வன்றிரிந்து
வேரட்ட நிற்பித் திடுகின்ற

தால்விரி நீர்ப்பரவைச்
சூரட்ட வேலவன் தாதையைச்

சூழ்வய லாரதிகை
வீரட்டத் தானை விரும்பா

வரும்பாவ வேதனையே.

4.105.5

1007

படர்பொற் சடையும் பகுவாய்

அரவும் பனிமதியுஞ்
சுடலைப் பொடியு மெல்லா

முளவேயவர் தூயதெண்ணீர்க்
கெடிலக் கரைத்திரு வீரட்ட

ராவர்கெட் டேனடைந்தார்
நடலைக்கு நற்றுணை யாகுங்கண்

டீரவர் நாமங்களே.

4.105.6

1008

காளங் கடந்ததோர் கண்டத்த

ராகிக் கண்ணார்கெடில
நாளங் கடிக்கோர் நகரமு

மாதிற்கு நன்கிசைந்த
தாளங்கள் கொண்டுங் குழல்கொண்டு

மியாழ்கொண்டுந் தாமங்ஙனே
வேடங்கள் கொண்டும் விசும்புசெல்

வாரவர் வீரட்டரே.

4.105.7

இப்பதிகத்தில் 8,9,10-ம் செய்யுட்கள் மறைந்து போயின.

4.105.8-10

திருச்சிற்றம்பலம்