திருப்புகலூர் - திருவிருத்தம்

bookmark

திருச்சிற்றம்பலம்

1009

தன்னைச் சரணென்று தாளடைந்

தேன்றன் அடியடையப்
புன்னைப் பொழிற்புக லூரண்ணல்

செய்வன கேண்மின்களோ
என்னைப் பிறப்பறுத் தென்வினை

கட்டறுத் தேழ்நரகத்
தென்னைக் கிடக்கலொட் டான்சிவ

லோகத் திருத்திடுமே.

4.106.1

1010

பொன்னை வகுத்தன்ன மேனிய

னேபுணர் மென்முலையாள்
தன்னை வகுத்தன்ன பாகத்தனே

தமியேற் கிரங்காய்
புன்னை மலர்த்தலை வண்டுறங்

கும்புக லூரரசே
என்னை வகுத்திலை யேலிடும்

பைக்கிடம் யாதுசொல்லே.

4.106.2

இப்பதிகத்தில் 3-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

4.106.3

1011

பொன்னள வார்சடைக் கொன்றையி

னாய்புக லூர்க்கரசே
மன்னுள தேவர்கள் தேடு

மருந்தே வலஞ்சுழியாய்
என்னள வேயுனக் காட்பட்

டிடைக்கலத் தேகிடப்பார்
உன்னள வேயெனக் கொன்றுமி

ரங்காத உத்தமனே.

4.106.4

இப்பதிகத்தில் 5,6,7,8,9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.

4.106.5-9

1012

ஓணப் பிரானும் ஒளிர்மா

மலர்மிசை உத்தமனுங்
காணப் பராவியுங் காண்கின்

றிலர்கர நாலைந்துடைத்
தோணற் பிரானை வலிதொலைத்

தோன்தொல்லை நீர்ப்புகலூர்க்
கோணப் பிரானைக் குறுகக்

குறுகா கொடுவினையே.

4.106.10

திருச்சிற்றம்பலம்