திருக்கழிப்பாலை - திருவிருத்தம்

bookmark

திருச்சிற்றம்பலம்

1013

நெய்தற் குருகுதன் பிள்ளையென்

றெண்ணி நெருங்கிச்சென்று
கைதை மடற்புல்கு தென்கழிப்

பாலை யதனுறைவாய்
பைதற் பிறையொடு பாம்புடன்

வைத்த பரிசறியோம்
எய்தப் பெறின்இரங் காதுகண்

டாய்நம் மிறையவனே.

4.107.1

1014

பருமா மணியும் பவளமுத்

தும்பரந் துந்திவரை
பொருமால் கரைமேற் றிரைகொணர்ந்

தெற்றப் பொலிந்திலங்குங்
கருமா மிடறுடைக் கண்டனெம்

மான்கழிப் பாலையெந்தை
பெருமா னவனென்னை யாளுடை

யானிப் பெருநிலத்தே.

4.107.2

1015

நாட்பட் டிருந்தின்பம் எய்தலுற்

றிங்கு நமன்தமராற்
கோட்பட் டொழிவதன் முந்துற

வேகுளி ரார்தடத்துத்
தாட்பட்ட தாமரைப் பொய்கையந்

தண்கழிப் பாலையண்ணற்
காட்பட் டொழிந்தவன் றேவல்ல

மாயிவ் வகலிடத்தே.

4.107.3

இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைந்து போயின.

4.107.4-10

திருச்சிற்றம்பலம்