திருமாற்பேறு - திருவிருத்தம்

bookmark

திருச்சிற்றம்பலம்

முதலிரு செய்யுட்கள் சிதைந்து போயின

4.109.1-2

1026

மாணிக் குயிர்பெறக் கூற்றை

யுதைத்தன மாவலிபால்
காணிக் கிரந்தவன் காண்டற்

கரியன கண்டதொண்டர்
பேணிக் கிடந்து பரவப்

படுவன பேர்த்துமஃதே
மாணிக்க மாவன மாற்பே

றுடையான் மலரடியே.

4.109.3

1027

கருடத் தனிப்பாகன் காண்டற்

கரியன காதல்செய்யிற்
குருடர்க்கு முன்னே குடிகொண்

டிருப்பன கோலமல்கு
செருடக் கடிமலர்ச் செல்விதன்

செங்கம லக்கரத்தால்
வருடச் சிவப்பன மாற்பே

றுடையான் மலரடியே.

4.109.4

இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைந்து போயின.

4.109.5-10

திருச்சிற்றம்பலம்