திருத்தூங்கானைமாடம் - திருவிருத்தம்

bookmark

திருச்சிற்றம்பலம்

1028

பொன்னார் திருவடிக் கொன்றுண்டு

விண்ணப்பம் போற்றிசெய்யும்
என்னாவி காப்பதற் கிச்சையுண்

டேலிருங் கூற்றகல
மின்னாரு மூவிலைச் சூலமென்

மேற்பொறி மேவுகொண்டல்
துன்னார் கடந்தையுள் தூங்கானை

மாடச் சுடர்க்கொழுந்தே.

4.110.1

1029

ஆவா சிறுதொண்ட னென்நினைந்

தானென் றரும்பிணிநோய்
காவா தொழியிற் கலக்குமுன்

மேற்பழி காதல்செய்வார்
தேவா திருவடி நீறென்னைப்

பூசுசெந் தாமரையின்
பூவார் கடந்தையுள் தூங்கானை

மாடத்தெம் புண்ணியனே.

4.110.2

இப்பதிகத்தில் 3,4,5,6,7,8,9-ம் செய்யுட்கள்
சிதைந்து போயின.

4.110.3-9

1030

கடவுந் திகிரி கடவா

தொழியக் கயிலையுற்றான்
படவுந் திருவிர லொன்றுவைத்

தாய்பனி மால்வரைபோல்
இடபம் பொறித்தென்னை ஏன்றுகொள்

ளாயிருஞ் சோலைதிங்கள்
தடவுங் கடந்தையுள் தூங்கானை

மாடத்தெந் தத்துவனே.

4.110.10

திருச்சிற்றம்பலம்