பசுபதி - திருவிருத்தம்

bookmark

திருச்சிற்றம்பலம்

1031

சாம்பலைப் பூசித் தரையிற்

புரண்டுநின் றாள்பரவி
ஏம்பலிப் பார்கட் கிரங்குகண்

டாயிருங் கங்கையென்னுங்
காம்பலைக் கும்பணைத் தோளி

கதிர்ப்பூண் வனமுலைமேற்
பாம்பலைக் குஞ்சடை யாயெம்மை

யாளும் பசுபதியே.

4.111.1

1032

உடம்பைத் தொலைவித்துன் பாதந்

தலைவைத்த உத்தமர்கள்
இடும்பைப் படாமல் இரங்குகண்

டாயிரு ளோடச்செந்தீ
அடும்பொத் தனைய அழன்மழு

வாவழ லேயுமிழும்
படம்பொத் தரவரை யாயெம்மை

யாளும் பசுபதியே.

4.111.2

1033

தாரித் திரந்தவி ராவடி

யார்தடு மாற்றமென்னும்
மூரித் திரைப்பௌவ நீக்குகண்

டாய்முன்னை நாளொருகால்
வேரித்தண் பூஞ்சுடர் ஐங்கணை

வேள்வெந்து வீழச்செந்தீப்
பாரித்த கண்ணுடை யாயெம்மை

யாளும் பசுபதியே.

4.111.3

1034

ஒருவரைத் தஞ்சமென் றெண்ணாதுன்

பாத மிறைஞ்சுகின்றார்
அருவினைச் சுற்றம் அகல்விகண்

டாயண்ட மேயணவும்
பெருவரைக் குன்றம் பிளிறப்

பிளந்துவேய்த் தோளியஞ்சப்
பருவரைத் தோலுரித் தாயெம்மை

யாளும் பசுபதியே.

4.111.4

1035

இடுக்கொன்று மின்றியெஞ் சாமையுன்

பாத மிறைஞ்சுகின்றார்க்
கடர்க்கின்ற நோயை விலக்குகண்

டாயண்டம் எண்டிசையுஞ்
சுடர்த்திங்கள் சூடிச் சுழற்கங்கை

யோடுஞ் சுரும்புதுன்றிப்
படர்க்கொண்ட செஞ்சடை யாயெம்மை

யாளும் பசுபதியே.

4.1115

1036

அடலைக் கடல்கழி வான்நின்

னடியிணை யேயடைந்தார்
நடலைப் படாமை விலக்குகண்

டாய்நறுங் கொன்றை திங்கள்
சுடலைப் பொடிச்சுண்ண மாசுணஞ்

சூளா மணிகிடந்து
படரச் சுடர்மகு டாயெம்மை

யாளும் பசுபதியே.

4.111.6

1037

துறவித் தொழிலே புரிந்துன்

சுரும்படி யேதொழுவார்
மறவித் தொழிலது மாற்றுகண்

டாய்மதின் மூன்றுடைய
அறவைத் தொழில்புரிந் தந்தரத்

தேசெல்லு மந்திரத்தேர்ப்
பறவைப் புரமெரித் தாயெம்மை

யாளும் பசுபதியே.

4.111.7

இப்பதிகத்தில் 8,9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.

4.111.8-9

1038

சித்தத் துருகிச் சிவனெம்

பிரானென்று சிந்தையுள்ளே
பித்துப் பெருகப் பிதற்றுகின்

றார்பிணி தீர்த்தருளாய்
மத்தத் தரக்கன் இருபது

தோளு முடியுமெல்லாம்
பத்துற் றுறநெரித் தாயெம்மை

யாளும் பசுபதியே.

4.111.10

திருச்சிற்றம்பலம்