திருவாரூர்

bookmark

பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்

198

காண்டலேகருத் தாய்நினைந்திருந்

தேன்மனம்புகுந் தாய்கழலடி
பூண்டுகொண் டொழிந்தேன்

புறம்போயி னாலறையோ
ஈண்டுமாடங்கள் நீண்டமாளிகை

மேலெழுகொடி வானிளம்மதி
தீண்டிவந் துலவுந்

திருவாரூ ரம்மானே.

4.20.1

199

கடம்படந்நட மாடினாய்களை

கண்ணெனக்கொரு காதல்செய்தடி
ஒடுங்கி வந்தடைந்

தேனொழிப்பாய் பிழைப்பவெல்லாம்
முடங்கிறால்முது நீர்மலங்கிள

வாளைசெங்கயல் சேல்வரால்களி
றடைந்த தண்கழனி

அணியாரூ ரம்மானே.

4.20.2

200

அருமணித்தடம் பூண்முலை

அரம்பையரொ டருளிப்பாடியர்
உரிமையிற் றொழுவார்

உத்திர பல்கணத்தார்
விரிசடைவிர திகளந்தணர்

சைவர்பாசுப தர்கபாலிகள்
தெருவினிற் பொலியுந்

திருவாரூ ரம்மானே.

4.20.3

201

பூங்கழல்தொழு தும்பரவியும்

புண்ணியாபுனி தாவுன்பொற்கழல்
ஈங்கிருக்கப் பெற்றேன்

என்னகுறை யுடையேன்
ஓங்குதெங்கிலை யார்கமுகிப

வாழைமாவொடு மாதுளம்பல
தீங்கனி சிதறுந்

திருவாரூ ரம்மானே.

4.20.4

202

நீறுசேர்செழு மார்பினாய்நிரம்

பாமதியொடு நீள்சடையிடை
ஆறுபாய வைத்தாய்

அடியே அடைந்தொழிந்தேன்
ஏறிவண்டொடு தும்பியஞ்சிற

கூன்றவிண்ட மலரிதழ்வழி
தேறல்பாய்ந் தொழுகுந்

திருவாரூ ரம்மானே.

4.20.5

203

அளித்துவந்தடி கைதொழுமவர்

மேல்வினைகெடு மென்றிவையகங்
களித்துவந் துடனே

கலந்தாடக் காதலராய்க்
குளித்துமூழ்கியுந் தூவியுங்குடைந்

தாடுகோதையர் குஞ்சியுள்புகத்
தெளிக்குந் தீர்த்தமறாத்

திருவாரூ ரம்மானே.

4.20.6

204

திரியுமூவெயில் தீயெழச்சிலை

வாங்கிநின்றவ னேயென்சிந்தையுட்
பிரியுமா றெங்ஙனே

பிழைத்தேயும் போகலொட்டேன்
பெரியசெந்நெற் பிரம்புரிகெந்த

சாலிதிப்பிய மென்றிவையகத்
தரியுந் தண்கழனி

யணியாரூ ரம்மானே.

4.20.7

205

பிறத்தலும்பிறந் தாற்பிணிப்பட

வாய்ந்தசைந்துட லம்புகுந்துநின்
றிறக்குமா றுளதே

இழித்தேன் பிறப்பினைநான்
அறத்தையேபுரிந் தமனத்தனாய்

ஆர்வச்செற்றக்கு ரோதநீக்கியுன்
திறத்தனாய் ஒழிந்தேன்

திருவாரூ ரம்மானே.

4.20.8

206

முளைத்தவெண்பிறை மொய்சடையுடை

யாயெப்போதுமென் னெஞ்சிடங்கொள்ள
வளைத்துக் கொண்டிருந்தேன்

வலிசெய்து போகலொட்டேன்
அளைப்பிரிந்த அலவன்போய்ப்புகு

தந்தகாலமுங் கண்டுதன்பெடை
திளைக்குந் தண்கழனித்

திருவாரூ ரம்மானே.

4.20.9

207

நாடினார்கம லம்மலரய

னோடிரணியன் ஆகங்கீண்டவன்
நாடிக் காணமாட்டாத்

தழலாய நம்பானைப்
பாடுவார்பணி வார்பல்லாண்டிசை

கூறுபத்தர்கள் சித்தத்துள்புக்குத்
தேடிக் கண்டுகொண்டேன்

திருவாரூ ரம்மானே.

4.20.10

திருச்சிற்றம்பலம்