திருவதிகைவீரட்டானம் – திருநேரிசை

bookmark

249

வெண்ணிலா மதியந் தன்னை

விரிசடை மேவ வைத்து
உண்ணிலாப் புகுந்து நின்றங்

குணர்வினுக் குணரக் கூறி
விண்ணிலார் மீயச் சூரர்

வேண்டுவார் வேண்டு வார்க்கே
அண்ணியார் பெரிதுஞ் சேயார்

அதிகைவீ ரட்ட னாரே.

4.25.1

250

பாடினார் மறைகள் நான்கும்

பாயிருள் புகுந்தென் உள்ளங்
கூடினார் கூட லால

வாயிலார் நல்ல கொன்றை
சூடினார் சூடல் மேவிச்

சூழ்சுடர்ச் சுடலை வெண்ணீ
றாடினார் ஆடல் மேவி

அதிகைவீ ரட்ட னாரே.

4.25.2

251

ஊனையே கழிக்க வேண்டில்

உணர்மின்கள் உள்ளத் துள்ளே
தேனைய மலர்கள் கொண்டு

சிந்தையுட் சிந்திக் கின்ற
ஏனைய பலவு மாகி

இமையவர் ஏத்த நின்று
ஆனையின் உரிவை போர்த்தார்

அதிகைவீ ரட்ட னாரே.

4.25.3

252

துருத்தியாங் குரம்பை தன்னில்

தொண்ணூற்றங் கறுவர் நின்று
விருத்திதான் தருக வென்று

வேதனை பலவுஞ் செய்ய
வருத்தியால் வல்ல வாறு

வந்துவந் தடைய நின்ற
அருத்தியார்க் கன்பர் போலும்

அதிகைவீ ரட்ட னாரே.

4.25.4

253

பத்தியால் ஏத்தி நின்று

பணிபவர் நெஞ்சத் துள்ளார்
துத்திஐந் தலைய நாகஞ்

சூழ்சடை முடிமேல் வைத்து
உத்தர மலையர் பாவை

உமையவள் நடுங்க அன்று
அத்தியின் உரிவை போர்த்தார்

அதிகைவீ ரட்ட னாரே.

4.25.5

254

வரிமுரி பாடி யென்றும்

வல்லவா றடைந்து நெஞ்சே
கரியுரி மூட வல்ல

கடவுளைக் காலத் தாலே
சுரிபுரி விரிகு ழலாள்

துடியிடைப் பரவை யல்குல்
அரிவையோர் பாகர் போலும்

அதிகைவீ ரட்ட னாரே.

4.25.6

255

நீதியால் நினைசெய் நெஞ்சே

நிமலனை நித்த மாகப்
பாதியாம் உமைதன் னோடும்

பாகமாய் நின்ற எந்தை
சோதியாய்ச் சுடர்வி ளக்காய்ச்

சுண்ணவெண் ணீற தாடி
ஆதியும் ஈறு மானார்

அதிகைவீ ரட்ட னாரே.

4.25.7

256

எல்லியும் பகலு மெல்லாந்

துஞ்சுவேற் கொருவர் வந்து
புல்லிய மனத்துக் கோயில்

புக்கனர் காம னென்னும்
வில்லிஐங் கணையி னானை

வெந்துக நோக்கி யிட்டார்
அல்லியம் பழன வேலி

அதிகைவீ ரட்ட னாரே.

4.25.8

257

ஒன்றவே யுணர்தி ராகில்

ஓங்காரத் தொருவ னாகும்
வென்றஐம் புலன்கள் தம்மை

விலக்குதற் குரியீ ரெல்லாம்
நன்றவன் நார ணனும்

நான்முகன் நாடிக் காண்குற்
றன்றவர்க் கரியர் போலும்

அதிகைவீ ரட்ட னாரே.

4.25.9

258

தடக்கையால் எடுத்து வைத்துத்

தடவரை குலுங்க ஆர்த்துக்
கிடக்கையால் இடர்க ளோங்கக்

கிளர்மணி முடிகள் சாய
முடக்கினார் திருவி ரலான்

முருகமர் கோதை பாகத்
தடக்கினார் என்னை யாளும்

அதிகைவீ ரட்ட னாரே.

4.25.10

திருச்சிற்றம்பலம்