திருத்துருத்தி - திருநேரிசை

bookmark

பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்

414

பொருத்திய குரம்பை தன்னைப்

பொருளெனக் கருத வேண்டா
இருத்தியெப் போதும் நெஞ்சுள்

இறைவனை ஏத்து மின்கள்
ஒருத்தியைப் பாகம் வைத்தங்

கொருத்தியைச் சடையில் வைத்த
துருத்தியஞ் சுடரி னானைத்

தொண்டனேன் கண்ட வாறே.

4.42.1

415

சவைதனைச் செய்து வாழ்வான்

சலத்துளே யழுந்து கின்ற
இவையொரு பொருளு மல்ல

இறைவனை ஏத்து மின்னோ
அவைபுர மூன்றும் எய்தும்

அடியவர்க் கருளிச் செய்த
சுவையினைத் துருத்தி யானைத்

தொண்டனேன் கண்ட வாறே.

4.42.2

416

உன்னியெப் போதும் நெஞ்சுள்

ஒருவனை ஏத்து மின்னோ
கன்னியை ஒருபால் வைத்துக்

கங்கையைச் சடையுள் வைத்துப்
பொன்னியின் நடுவு தன்னுள்

பூம்புனல் பொலிந்து தோன்றுந்
துன்னிய துருத்தி யானைத்

தொண்டனேன் கண்ட வாறே.

4.42.3

417

ஊன்றலை வலிய னாகி

உலகத்துள் உயிர்கட் கெல்லாந்
தான்றலைப் பட்டு நின்று

சார்கன லகத்து வீழ
வான்றலைத் தேவர் கூடி

வானவர்க் கிறைவா வென்னுந்
தோன்றலைத் துருத்தி யானைத்

தொண்டனேன் கண்ட வாறே.

4.42.4

418

உடல்தனைக் கழிக்க லுற்ற

உலகத்துள் உயிர்கட் கெல்லாம்
இடர்தனைக் கழிக்க வேண்டில்

இறைவனை ஏத்து மின்னோ
கடல்தனில் நஞ்ச முண்டு

காண்பரி தாகி நின்ற
சுடர்தனைத் துருத்தி யானைத்

தொண்டனேன் கண்ட வாறே.

4.42.5

419

அள்ளலைக் கடக்க வேண்டில்

அரனையே நினைமி னீணர்கள்
பொள்ளலிக் காயந் தன்னுட்

புண்டரீ கத்தி ருந்த
வள்ளலை வான வர்க்குங்

காண்பரி தாகி நின்ற
துள்ளலைத் துருத்தி யானைத்

தொண்டனேன் கண்ட வாறே.

4.42.6

420

பாதியில் உமையாள் தன்னைப்

பாகமா வைத்த பண்பன்
வேதியன் என்று சொல்லி

விண்ணவர் விரும்பி ஏத்தச்
சாதியாஞ் சதுர்மு கனுஞ்

சக்கரத் தானுங் காணாச்
சோதியைத் துருத்தி யானைத்

தொண்டனேன் கண்ட வாறே.

4.42.7

421

சாமனை வாழ்க்கை யான

சலத்துளே யழுந்த வேண்டா
தூமநல் லகிலுங் காட்டித்

தொழுதடி வணங்கு மின்னோ
சோமனைச் சடையுள் வைத்துத்

தொன்னெறி பலவுங் காட்டுந்
தூமனத் துருத்தி யானைத்

தொண்டனேன் கண்டா வாறே.

4.42.8

422

குண்டரே சமணர் புத்தர்

குறியறி யாது நின்று
கண்டதே கருது வார்கள்

கருத்தெண்ணா தொழிமி னீணர்கள்
விண்டவர் புரங்கள் எய்து

விண்ணவர்க் கருள்கள் செய்த
தொண்டர்கள் துணையி னானைத்

துருத்திநான் கண்ட வாறே.

4.42.9

423

பிண்டத்தைக் கழிக்க வேண்டிற்

பிரானையே பிதற்று மின்கள்
அண்டத்தைக் கழிய நீண்ட

அடலரக் கன்றன் ஆண்மை
கண்டொத்துக் கால்வி ரலால்

ஊன்றிமீண் டருளிச் செய்த
துண்டத்துத் துருத்தி யானைத்

தொண்டனேன் கண்ட வாறே.

4.42.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வேதேசுவரர்,
தேவியார் - முகிழாம்பிகையம்மை.

திருச்சிற்றம்பலம்