திருவொற்றியூர் - திருநேரிசை

bookmark

திருச்சிற்றம்பலம்

454

ஓம்பினேன் கூட்டை வாளா

உள்ளத்தோர் கொடுமை வைத்துக்
காம்பிலா மூழை போலக்

கருதிற்றே முகக்க மாட்டேன்
பாம்பின்வாய்த் தேரை போலப்

பலபல நினைக்கின் றேனை
ஓம்பிநீ உய்யக் கொள்ளாய்

ஒற்றியூ ருடைய கோவே.

4.46.1

455

மனமெனுந் தோணி பற்றி

மதியெனுங் கோலை யூன்றிச்
சினமெனுஞ் சரக்கை யேற்றிச்

செறிகட லோடும் போது
மதனெனும் பாறை தாக்கி

மறியும்போ தறிய வொண்ணா
துனையுனும் உணர்வை நல்காய்

ஒற்றியூ ருடய கோவே.

4.46.2

இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைவுற்றன.

4.46.3-10

திருச்சிற்றம்பலம