திருக்கயிலாயம் - திருநேரிசை

bookmark

திருச்சிற்றம்பலம்

456

கனகமா வயிர முந்து

மாமணிக் கயிலை கண்டும்
உனகனா யரக்க னோடி

யெடுத்தலு முமையா ளஞ்ச
அனகனாய் நின்ற ஈச

னூன்றலு மலறி வீழ்ந்தான்
மனகனா யூன்றி னானேல்

மறித்துநோக் கில்லை யன்றே.

4.47.1

457

கதித்தவன் கண்சி வந்து

கயிலைநன் மலையை யோடி
அதிர்த்தவன் எடுத்தி டலும்

அரிவைதான் அஞ்ச ஈசன்
நெதித்தவ னூன்றி யிட்ட

நிலையழிந் தலறி வீழ்ந்தான்
மதித்திறை யூன்றி னானேல்

மறித்துநோக் கில்லை யன்றே.

4.47.2

458

கறுத்தவன் கண்சி வந்து

கயிலைநன் மலையைக் கையால்
மறித்தலும் மங்கை அஞ்ச

வானவர் இறைவன் நக்கு
நெறித்தொரு விரலா லூன்ற

நெடுவரை போல வீழ்ந்தான்
மறித்திறை யூன்றி னானேல்

மறித்துநோக் கில்லை யன்றே.

4.47.3

459

கடுத்தவன் கண்சி வந்து

கயிலைநன் மலையை யோடி
எடுத்தலும் மங்கை அஞ்ச

இறையவ னிறையே நக்கு
நொடிப்பள விரலா லூன்ற

நோவது மலறி யிட்டான்
மடித்திறை யூன்றி னானேல்

மறித்துநோக் கில்லை யன்றே.

4.47.4

460

கன்றித்தன் கண்சி வந்து

கயிலைநன் மலையை யோடி
வென்றித்தன் கைத்த லத்தா

லெடுத்தலும் வெருவ மங்கை
நன்றுத்தான் நக்கு நாத

னூன்றலு நகழ வீழ்ந்தான்
மன்றித்தான் ஊன்றி னானேல்

மறித்துநோக் கில்லை யன்றே.

4.47.5

461

களித்தவன் கண்சி வந்து

கயிலைநன் மலையை யோடி
நெளித்தவ னெடுத்தி டலும்

நேரிழை அஞ்ச நோக்கி
வெளித்தவ னூன்றி யிட்ட

வெற்பினா லலறி வீழ்ந்தான்
மளித்திறை யூன்றி னானேல்

மறித்துநோக் கில்லை யன்றே.

4.47.6

462

கருத்தனாய்க் கண்சி வந்து

கயிலைநன் மலையைக் கையால்
எருத்தனாய் எடுத்த வாறே

ஏந்திழை அஞ்ச ஈசன்
திருத்தனாய் நின்ற தேவன்

திருவிர லூன்ற வீழ்ந்தான்
வருத்துவான் ஊன்றி னானேல்

மறித்துநோக் கில்லை யன்றே.

4.47.7

463

கடியவன் கண்சி வந்து

கயிலைநன் மலையை யோடி
வடிவுடை மங்கை அஞ்ச

எடுத்தலும் மருவ நோக்கிச்
செடிபடத் திருவி ரலா

லூன்றலுஞ் சிதைந்து வீழ்ந்தான்
வடிவுற வூன்றி னானேல்

மறித்துநோக் கில்லை யன்றே.

4.47.8

464

கரியத்தான் கண்சி வந்து

கயிலைநன் மலையைப் பற்றி
இரியத்தான் எடுத்தி டலும்

ஏந்திழை அஞ்ச ஈசன்
நெரியத்தான் ஊன்றா முன்னம்

நிற்கிலா தலறி வீழ்ந்தான்
மரியத்தான் ஊன்றி னானேல்

மறித்துநோக் கில்லை யன்றே.

4.47.9

465

கற்றனன் கயிலை தன்னைக்

காண்டலும் அரக்கன் ஓடிச்
செற்றவன் எடுத்த வாறே

சேயிழை அஞ்ச ஈசன்
உற்றிறை ஊன்றா முன்னம்

உணர்வழி வகையால் வீழ்ந்தான்
மற்றிறை ஊன்றி னானேல்

மறித்துநோக் கில்லை யன்றே.

4.47.10

இத்தலம் வடநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கைலாயநாதர், தேவியார் - பார்வதியம்மை.

திருச்சிற்றம்பலம்