திருக்குறுக்கை – திருநேரிசை

bookmark

486

நெடியமால் பிரம னோடு

நீரெனும் பிலயங் கொள்ள
அடியொடு முடியுங் காணார்

அருச்சுனற் கம்பும் வில்லுந்
துடியுடை வேட ராகித்

தூயமந் திரங்கள் சொல்லிக்
கொடிநெடுந் தேர்கொ டுத்தார்

குறுக்கைவீ ரட்ட னாரே.

4.50.1

487

ஆத்தமாம் அயனு மாலும்

அன்றிமற் றொழிந்த தேவர்
சோத்தமெம் பெருமான் என்று

தொழுதுதோத் திரங்கள் சொல்லத்
தீர்த்தமாம் அட்ட மிமுன்

சீருடை ஏழு நாளுங்
கூத்தராய் வீதி போந்தார்

குறுக்கைவீ ரட்ட னாரே.

4.50.2

இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைவுற்றன.

4.50.3-10

திருச்சிற்றம்பலம்