திருக்கோடிகா - திருநேரிசை

bookmark

திருச்சிற்றம்பலம்

488

நெற்றிமேற் கண்ணி னானே

நீறுமெய் பூசி னானே
கற்றைப்புன் சடையி னானே

கடல்விடம் பருகி னானே
செற்றவர் புரங்கள் மூன்றுஞ்

செவ்வழல் செலுத்தி னானே
குற்றமில் குணத்தி னானே

கோடிகா வுடைய கோவே.

4.51.1

489

கடிகமழ் கொன்றை யானே

கபாலங்கை யேந்தி னானே
வடிவுடை மங்கை தன்னை

மார்பிலோர் பாகத் தானே
அடியிணை பரவ நாளும்

அடியவர்க் கருள்செய் வானே
கொடியணி விழவ தோவாக்

கோடிகா வுடைய கோவே.

4.51.2

490

நீறுமெய் பூசி னானே

நிழல்திகழ் மழுவி னானே
ஏறுகந் தேறி னானே

இருங்கடல் அமுதொப் பானே
ஆறுமோர் நான்கு வேதம்

அறமுரைத் தருளி னானே
கூறுமோர் பெண்ணி னானே

கோடிகா வுடைய கோவே.

4.51.3

491

காலனைக் காலாற் செற்றன்

றருள்புரி கருணை யானே
நீலமார் கண்டத் தானே

நீண்முடி யமரர் கோவே
ஞாலமாம் பெருமை யானே

நளிரிளந் திங்கள் சூடுங்
கோலமார் சடையி னானே

கோடிகா வுடைய கோவே.

4.51.4

492

பூணர வாரத் தானே

புலியுரி அரையி னானே
காணில்வெண் கோவ ணமுங்

கையிலோர் கபால மேந்தி
ஊணுமூர்ப் பிச்சை யானே

உமையொரு பாகத் தானே
கோணல்வெண் பிறையி னானே

கோடிகா வுடைய கோவே.

4.51.5

493

கேழல்வெண் கொம்பு பூண்ட

கிளரொளி மார்பி னானே
ஏழையேன் ஏழை யேன்நான்

என்செய்கேன் எந்தை பெம்மான்
மாழையொண் கண்ணி னார்கள்

வலைதனில் மயங்கு கின்றேன்
கூழைஏ றுடைய செல்வா

கோடிகா வுடைய கோவே.

4.51.6

494

அழலுமிழ் அங்கை யானே

அரிவையோர் பாகத் தானே
தழலுமிழ் அரவம் ஆர்த்துத்

தலைதனிற் பலிகொள் வானே
நிழலுமிழ் சோலை சூழ

நீள்வரி வண்டி னங்கள்
குழலுமிழ் கீதம் பாடுங்

கோடிகா வுடைய கோவே.

4.51.7

495

ஏவடு சிலையி னாலே

புரமவை எரிசெய் தானே
மாவடு வகிர்கொள் கண்ணாள்

மலைமகள் பாகத் தானே
ஆவடு துறையு ளானே

ஐவரால் ஆட்டப் பட்டேன்
கோவடு குற்றந் தீராய்

கோடிகா வுடைய கோவே.

4.51.8

496

ஏற்றநீர்க் கங்கை யானே

இருநிலந் தாவி னானும்
நாற்றமா மலர்மேல் ஏறும்

நான்முகன் இவர்கள் கூடி
ஆற்றலால் அளக்க லுற்றார்க்

கழலுரு வாயினானே
கூற்றுக்குங் கூற்ற தானாய்

கோடிகா வுடைய கோவே.

4.51.9

497

பழகநான் அடிமை செய்வேன்

பசுபதீ பாவ நாசா
மழகளி யானை யின்றோல்

மலைமகள் வெருவப் போர்த்த
அழகனே அரக்கன் திண்டோ ள்

அருவரை நெரிய வூன்றுங்
குழகனே கோல மார்பா

கோடிகா வுடைய கோவே.

4.51.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கோடீசுவரர்; தேவியார் - வடிவாம்பிகையம்மை

திருச்சிற்றம்பலம்