குறைந்த - திருநேரிசை

bookmark

திருச்சிற்றம்பலம்

754

வென்றிலேன் புலன்க ளைந்தும்

வென்றவர் வளாகந் தன்னுள்
சென்றிலே னாத லாலே

செந்நெறி யதற்குஞ் சேயேன்
நின்றுளே துளும்பு கின்றேன்

நீசனேன் ஈச னேயோ
இன்றுளேன் நாளை யில்லேன்

என்செய்வான் தோன்றி னேனே.

4.78.1

755

கற்றிலேன் கலைகள் ஞானங்

கற்றவர் தங்க ளோடும்
உற்றிலே னாத லாலே

உணர்வுக்குஞ் சேய னானேன்
பெற்றிலேன் பெருந்த டங்கண்

பேதைமார் தமக்கும் பொல்லேன்
எற்றுளேன் இறைவ னேநான்

என்செய்வான் தோன்றி னேனே.

4.78.2

756

மாட்டினேன் மனத்தை முன்னே

மறுமையை உணர மாட்டேன்
மூட்டிநான் முன்னை நாளே

முதல்வனை வணங்க மாட்டேன்
பாட்டினாய் போல நின்று

பற்றதாம் பாவந் தன்னை
ஈட்டினேன் களைய மாட்டேன்

என்செய்வான் தோன்றி னேனே.

4.78.3

757

கரைக்கடந் தோத மேறுங்

கடல்விட முண்ட கண்டன்
உரைக்கடந் தோது நீர்மை

யுணர்ந்திலே னாத லாலே
அரைக்கிடந் தசையு நாகம்

அசைப்பனே இன்ப வாழ்க்கைக்
கிரைக்கிடைந் துருகு கின்றேன்

என்செய்வான் தோன்றி னேனே.

4.78.4

758

செம்மைவெண் ணீறு பூசுஞ்
ச்஢வனவன் தேவ தேவன்
வெம்மைநோய் வினைகள் தீர்க்கும்

விகிர்தனுக் கார்வ மெய்தி
அம்மைநின் றடிமை செய்யா

வடிவிலா முடிவில் வாழ்க்கைக்
கிம்மைநின் றுருகு கின்றேன்

என்செய்வான் தோன்றி னேனே.

4.78.5

759

பேச்சொடு பேச்சுக் கெல்லாம்

பிறர்தமைப் புறமே பேசக்
கூச்சிலே னாத லாலே

கொடுமையை விடுமா றோரேன்
நாச்சொலி நாளும் மூர்த்தி

நன்மையை யுணர மாட்டேன்
ஏச்சுளே நின்று மெய்யே

என்செய்வான் தோன்றி னேனே.

4.78.6

760

தேசனைத் தேச மாகுந்

திருமாலோர் பங்கன் றன்னைப்
பூசனைப் புனிதன் றன்னைப்

புணரும்புண் டரிகத் தானை
நேசனை நெருப்பன் றன்னை

நிவஞ்சகத் தகன்ற செம்மை
ஈசனை அறிய மாட்டேன்

என்செய்வான் தோன்றி னேனே.

4.78.7

761

விளைக்கின்ற வினையை நோக்கி

வெண்மயிர் விரவி மேலும்
முளைக்கின்ற வினையைப் போக

முயல்கிலேன் இயல வெள்ளந்
திளைக்கின்ற முடியி னான்றன்

திருவடி பரவ மாட்டா
திளைக்கின்றே னிருமி யூன்றி

என்செய்வான் தோன்றி னேனே.

4.78.8

762

விளைவறி விலாமை யாலே

வேதனைக் குழியி லாழ்ந்து
களைகணு மில்லேன் எந்தாய்

காமரங் கற்று மில்லேன்
தளையவிழ் கோதை நல்லார்

தங்களோ டின்ப மெய்த
இளையனு மல்லேன் எந்தாய்

என்செய்வான் தோன்றி னேனே.

4.78.9

763

வெட்டன வுடைய னாகி

வீரத்தால் மலை யெடுத்த
துட்டனைத் துட்டுத் தீர்த்துச்

சுவைப்படக் கீதங் கேட்ட
அட்டமா மூர்த்தி யாய

ஆதியை ஓதி நாளும்
எட்டனை எட்ட மாட்டேன்

என்செய்வான் தோன்றி னேனே.

4.78.10

திருச்சிற்றம்பலம்