கோயில் - திருவிருத்தம்

bookmark

திருச்சிற்றம்பலம்

770

பாளையு டைக்கமு கோங்கிப்பன்

மாடம்நெ ருங்கியெங்கும்
வாளையு டைப்புனல் வந்தெறி

வாழ்வயல் தில்லைதன்னுள்
ஆளவு டைக்கழற் சிற்றம்ப

லத்தரன் ஆடல்கண்டாற்
பீளையு டைக்கண்க ளாற்பின்னைப்

பேய்த்தொண்டர் காண்பதென்னே.

4.80.1

771

பொருவிடை யொன்றுடைப் புண்ணிய

மூர்த்தி புலியதளன்
உருவுடை யம்மலை மங்கைம

ணாளன் உலகுக்கெல்லாந்
திருவுடை அந்தணர் வாழ்கின்ற

தில்லைச்சிற் றம்பலவன்
திருவடி யைக்கண்ட கண்கொண்டு

மற்றினிக் காண்பதென்னே.

4.80.2

772

தொடுத்த மலரொடு தூபமுஞ்

சாந்துங்கொண் டெப்பொழுதும்
அடுத்து வணங்கும் அயனொடு

மாலுக்குங் காண்பரியான்
பொடிக்கொண் டணிந்துபொன் னாகிய

தில்லைச்சிற் றம்பலவன்
உடுத்த துகில்கண்ட கண்கொண்டு

மற்றினிக் காண்பதென்னே.

4.80.3

773

வைச்ச பொருள்நமக் காகுமென்

றெண்ணி நமச்சிவாய
அச்ச மொழிந்தேன் அணிதில்லை

யம்பலத் தாடுகின்ற
பிச்சன் பிறப்பிலி பேர்நந்தி

உந்தியின் மேலசைத்த
கச்சின் அழகுகண் டாற்பின்னைக்

கண்கொண்டு காண்பதென்னே.

4.80.4

774

செய்ஞ்ஞின்ற நீல மலர்கின்ற

தில்லைச்சிற் றம்பலவன்
மைஞ்ஞின்ற ஒண்கண் மலைமகள்

கண்டு மகிழ்ந்துநிற்க
நெய்ஞ்ஞின் றெரியும் விளக்கொத்த

நீல மணிமிடற்றான்
கைஞ்ஞின்ற ஆடல்கண் டாற்பின்னைக்

கண்கொண்டு காண்பதென்னே.

4.80.5

775

ஊனத்தை நீக்கி உலகறிய

என்னை யாட்கொண்டவன்
தேனொத் தெனக்கினி யான்தில்லைச்

சிற்றம் பலவனெங்கோன்
வானத் தவருய்ய வன்னஞ்சை

யுண்டகண் டத்திலங்கும்
ஏனத் தெயிறு கண்டாற்பின்னைக்

கண்கொண்டு காண்பதென்னே.

4.80.6

776

தெரித்த கணையாற் திரிபுர

மூன்றுஞ்செந் தீயின்மூழ்க
எரித்த இறைவன் இமையவர்

கோமான் இணையடிகள்
தரித்த மனத்தவர் வாழ்கின்ற

தில்லைச்சிற் றம்பலவன்
சிரித்த முகங்கண்ட கண்கொண்டு

மற்றினிக் காண்பதென்னே.

4.80.7

777

சுற்று மமரர் சுரபதி

நின்திருப் பாதமல்லால்
பற்றொன் றிலோமென் றழைப்பப்

பரவையுள் நஞ்சையுண்டான்
செற்றங் கனங்கனைத் தீவிழித்

தான்றில்லை யம்பலவன்
நெற்றியிற் கண்கண்ட கண்கொண்டு

மற்றினிக் காண்பதென்னே.

4.80.8

778

சித்தத் தெழுந்த செழுங்கம

லத்தன்ன சேவடிகள்
வைத்த மனத்தவர் வாழ்கின்ற

தில்லைச்சிற் றம்பலவன்
முத்தும் வயிரமும் மாணிக்கந்

தன்னுள் விளங்கியதூ
மத்த மலர்கண்ட கண்கொண்டு

மற்றினிக் காண்பதென்னே.

4.80.9

779

தருக்கு மிகுத்துத்தன் றோள்வலி

யுன்னித் தடவரையை
வரைக்கை களாலெடுத் தார்ப்ப

மலைமகள் கோன்சிரித்து
அரக்கன் மணிமுடி பத்தும்

அணிதில்லை யம்பலவன்
நெருக்கி மிதித்த விரல்கண்ட

கண்கொண்டு காண்பதென்னே.

4.80.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - திருமூலத்தானநாயகர், சபாநாதர்,
தேவியார் - சிவகாமியம்மை.

திருச்சிற்றம்பலம்