கோயில் - திருவிருத்தம்

bookmark

திருச்சிற்றம்பலம்

780

கருநட்ட கண்டனை அண்டத்

தலைவனைக் கற்பகத்தைச்
செருநட்ட மும்மதி லெய்யவல்

லானைச்செந் தீமுழங்கத்
திருநட்ட மாடியைத் தில்லைக்

கிறையைச்சிற் றம்பலத்துப்
பெருநட்ட மாடியை வானவர்

கோனென்று வாழ்த்துவனே.

4.81.1

781

ஒன்றி யிருந்து நினைமின்கள்

உந்தமக் கூனமில்லை
கன்றிய காலனைக் காலாற்

கடிந்தான் அடியவற்காச்
சென்று தொழுமின்கள் தில்லையுட்

சிற்றம் பலத்துநட்டம்
என்றுவந் தாயெனும் எம்பெரு

மான்றன் திருக்குறிப்பே.

4.81.2

782

கன்மன வீர்கழி யுங்கருத்

தேசொல்லிக் காண்பதென்னே
நன்மன வர்நவில் தில்லையுட்

சிற்றம் பலத்துநட்டம்
பொன்மலை யில்வெள்ளிக் குன்றது

போலப் பொலிந்திலங்கி
என்மன மேயொன்றிப் புக்கனன்

போந்த சுவடில்லையே.

4.81.3

783

குனித்த புருவமுங் கொவ்வைச்செவ்

வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல்

மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்தபொற்

பாதமுங் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே

இந்த மாநிலத்தே.

4.81.4

784

வாய்த்தது நந்தமக் கீதோர்

பிறவி மதித்திடுமின்
பார்த்தற்குப் பாசு பதமருள்

செய்தவன் பத்தருள்ளீர்
கோத்தன்று முப்புரந் தீவளைத்

தான்றில்லை யம்பலத்துக்
கூத்தனுக் காட்பட் டிருப்பதன்

றோநந்தங் கூழைமையே.

4.81.5

785

பூத்தன பொற்சடை பொன்போல்

மிளிரப் புரிகணங்கள்
ஆர்த்தன கொட்டி யரித்தன

பல்குறட் பூதகணந்
தேத்தென வென்றிசை வண்டுகள்

பாடுசிற் றம்பலத்துக்
கூத்தனிற் கூத்துவல் லாருள

ரோவென்றன் கோல்வளைக்கே.

4.81.6

786

முடிகொண்ட மத்தமும் முக்கண்ணின்

நோக்கும் முறுவலிப்புந்
துடிகொண்ட கையுந் துதைந்தவெண்

ணீறுஞ் சுரிகுழலாள்
படிகொண்ட பாகமும் பாய்புலித்

தோலுமென் பாவிநெஞ்சிற்
குடிகொண்ட வாதில்லை யம்பலக்

கூத்தன் குரைகழலே.

4.81.7

787

படைக்கல மாகவுன் னாமத்

தெழுத்தஞ்சென் நாவிற்கொண்டேன்
இடைக்கல மல்லேன் எழுபிறப்

பும்முனக் காட்செய்கின்றேன்
துடைக்கினும் போகேன் தொழுது

வணங்கித்தூ நீறணிந்துன்
அடைக்கலங் கண்டாய் அணிதில்லைச்

சிற்றம் பலத்தரனே.

4.81.8

788

பொன்னொத்த மேனிமேல் வெண்ணீ

றணிந்து புரிசடைகள்
மின்னொத் திலங்கப் பலிதேர்ந்

துழலும் விடங்கவேடச்
சின்னத்தி னான்மலி தில்லையுட்

சிற்றம் பலத்துநட்டம்
என்னத்தன் ஆடல்கண் டின்புற்ற

தாலிவ் விருநிலமே.

4.81.9

789

சாட எடுத்தது தக்கன்றன்

வேள்வியிற் சந்திரனை
வீட எடுத்தது காலனை

நாரணன் நான்முகனுந்
தேட எடுத்தது தில்லையுட்

சிற்றம் பலத்துநட்டம்
ஆட எடுத்திட்ட பாதமன்

றோநம்மை யாட்கொண்டதே.

4.81.10

திருச்சிற்றம்பலம்