திருநெய்த்தானம் - திருவிருத்தம்

bookmark

திருச்சிற்றம்பலம்

853

பாரிடஞ் சாடிய பல்லுயிர்

வானம ரர்க்கருளிக்
காரடைந் தகடல் வாயுமிழ்

நஞ்சமு தாகவுண்டான்
ஊரடைந் திவ்வுல கிற்பலி

கொள்வது நாமறியோம்
நீரடைந் தகரை நின்றநெய்த்

தானத் திருந்தவனே.

4.89.1

854

தேய்ந்திலங் குஞ்சிறு வெண்மதி

யாய்நின் திருச்சடைமேற்
பாய்ந்தகங் கைப்புனற் பன்முக

மாகிப் பரந்தொலிப்ப
ஆய்ந்திலங் கும்மழு வேலுடை

யாயடி யேற்குரைநீ
ஏந்திள மங்கையும் நீயும்நெய்த்

தானத் திருந்ததுவே.

4.89.2

855

கொன்றடைந் தாடிக் குமைத்திடுங்

கூற்றமொன் னார்மதின்மேற்
சென்றடைந் தாடிப் பொருததுந்

தேசமெல் லாமறியுங்
குன்றடைந் தாடுங் குளிர்பொழிற்

காவிரி யின்கரைமேற்
சென்றடைந் தார்வினை தீர்க்குநெய்த்

தானத் திருந்தவனே.

4.89.3

856

கொட்டு முழவர வத்தொடு

கோலம் பலஅணிந்து
நட்டம் பலபயின் றாடுவர்

நாகம் அரைக் கசைத்துச்
சிட்டர் திரிபுரந் தீயெழச்

செற்ற சிலையுடையான்
இட்ட முமையொடு நின்றநெய்த்

தானத் திருந்தவனே.

4.89.4

857

கொய்மலர்க் கொன்றை துழாய்வன்னி

மத்தமுங் கூவிளமும்
மெய்மலர் வேய்ந்த விரிசடைக்

கற்றைவிண் ணோர்பெருமான்
மைமலர் நீல நிறங்கருங்

கண்ணியோர் பால்மகிழ்ந்தான்
நின்மல னாடல் நிலயநெய்த்

தானத் திருந்தவனே.

4.89.5

858

பூந்தார் நறுங்கொன்றை மாலையை

வாங்கிச் சடைக்கணிந்து
கூர்ந்தார் விடையினை யேறிப்பல்

பூதப் படைநடுவே
போந்தார் புறவிசை பாடவும்

ஆடவுங் கேட்டருளிச்
சேர்ந்தார் உமையவ ளோடுநெய்த்

தானத் திருந்தவனே.

4.89.6

859

பற்றின பாம்பன் படுத்த

புலியுரித் தோலுடையன்
முற்றின மூன்று மதில்களை

மூட்டி யெரித்தறுத்தான்
சுற்றிய பூதப் படையினன்

சூல மழுவொருமான்
செற்றுநந் தீவினை தீர்க்குநெய்த்

தானத் திருந்தவனே.

4.89.7

860

விரித்த சடையினன் விண்ணவர்

கோன்விட முண்டகண்டன்
உரித்த கரியுரி மூடியொன்

னார்மதில் மூன்றுடனே
எரித்த சிலையினன் ஈடழியா

தென்னை ஆண்டுகொண்ட
தரித்த உமையவ ளோடுநெய்த்

தானத் திருந்தவனே.

4.89.8

861

தூங்கான் துளங்கான் துழாய்கொன்றை

துன்னிய செஞ்சடைமேல்
வாங்கா மதியமும் வாளர

வுங்கங்கை தான்புனைந்தான்
தேங்கார் திரிபுரந் தீயெழ

வெய்து தியக்கறுத்து
நீங்கான் உமையவ ளோடுநெய்த்

தானத் திருந்தவனே.

4.89.9

862

ஊட்டிநின் றான்பொரு வானில

மும்மதில் தீயம்பினால்
மாட்டிநின் றான்அன்றி னார்வெந்து

வீழவும் வானவர்க்குக்
காட்டிநின் றான்கத மாக்கங்கை

பாயவோர் வார்சடையை
நீட்டிநின் றான்றிரு நின்றநெய்த்

தானத் திருந்தவனே.

4.89.10

திருச்சிற்றம்பலம்