திருப்பாதிரிப்புலியூர் - திருவிருத்தம்

bookmark

திருச்சிற்றம்பலம்

913

ஈன்றாளு மாயெனக் கெந்தையு

மாயுடன் தோன்றினராய்
மூன்றா யுலகம் படைத்துகந்

தான்மனத் துள்ளிருக்க
ஏன்றான் இமையவர்க் கன்பன்

திருப்பா திரிப்புலியூர்த்
தோன்றாத் துணையா யிருந்தனன்

றன்னடி யோங்களுக்கே.

4.95.1

914

பற்றாய் நினைந்திடப் போதுநெஞ்

சேயிந்தப் பாரைமுற்றுஞ்
சுற்றாய் அலைகடல் மூடினுங்

கண்டேன் புகல்நமக்கு
உற்றான் உமையவட் கன்பன்

திருப்பா திரிப்புலியூர்
முற்றா முளைமதிக் கண்ணியி

னான்றன மொய்கழலே.

4.95.2

915

விடையான் விரும்பியென் னுள்ளத்

திருந்தான் இனிநமக்கிங்
கடையா அவலம் அருவினை

சாரா நமனையஞ்சோம்
புடையார் கமலத் தயன்போல்

பவர்பா திரிப்புலியூர்
உடையான் அடியார் அடியடி

யோங்கட் கரியதுண்டே.

4.95.3

916

மாயமெல் லாமுற்ற விட்டிருள்

நீங்க மலைமகட்கே
நேயம் நிலாவ இருந்தா

னவன்றன் திருவடிக்கே
தேயமெல் லாநின் றிறைஞ்சுந்

திருப்பா திரிப்புலியூர்
மேயநல் லான்மலர்ப் பாதமென்

சிந்தையுள் நின்றனவே.

4.95.4

917

வைத்த பொருள்நமக் காமென்று

சொல்லி மனத்தடைத்துச்
சித்த மொருக்கிச் சிவாய

நமவென் றிருக்கினல்லால்
மொய்த்த கதிர்மதி போல்வா

ரவர்பா திரிப்புலியூர்
அத்தன் அருள்பெற லாமோ

அறிவிலாப் பேதைநெஞ்சே.

4.95.5

918

கருவாய்க் கிடந்துன் கழலே

நினையுங் கருத்துடையேன்
உருவாய்த் தெரிந்துன்றன் நாமம்

பயின்றேன் உனதருளாற்
திருவாய் பொலியச் சிவாய

நமவென்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி நீபா

திரிப்புலி யூரரனே.

4.95.6

919

எண்ணா தமரர் இரக்கப்

பரவையுள் நஞ்சமுண்டாய்
திண்ணார் அசுரர் திரிபுரந்

தீயெழச் செற்றவனே
பண்ணார்ந் தமைந்த பொருள்கள்

பயில்பா திரிப்புலியூர்க்
கண்ணார் நுதலாய் கழல்நங்

கருத்தில் உடையனவே.

4.957

920

புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா

வுன்னடி யென்மனத்தே
வழுவா திருக்க வரந்தர

வேண்டுமிவ் வையகத்தே
தொழுவார்க் கிரங்கி யிருந்தருள்

செய்பா திரிப்புலியூர்ச்
செழுநீர்ப் புனற்கங்கை செஞ்சடை

மேல்வைத்த தீவண்ணனே.

4.95.8

921

மண்பா தலம்புக்கு மால்கடல்

மூடிமற் றேழுலகும்
விண்பால் திசைகெட் டிருசுடர்

வீழினும் அஞ்சல்நெஞ்சே
திண்பால் நமக்கொன்று கண்டோ ந்

திருப்பா திரிப்புலியூர்க்
கண்பாவு நெற்றிக் கடவுட்

சுடரான் கழலிணையே.

4.95.9

922

திருந்தா அமணர்தந் தீநெறிப்

பட்டுத் திகைத்துமுத்தி
தருந்தா ளிணைக்கே சரணம்

புகுந்தேன் வரையெடுத்த
பொருந்தா அரக்கன் உடல்நெரித்

தாய்பா திரிப்புலியூர்
இருந்தாய் அடியேன் இனிப்பிற

வாமல்வந் தேன்றுகொள்ளே.

4.95.10

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தோன்றாத்துணையீசுவரர்,
தேவியார் - தோகையம்பிகையம்மை.

திருச்சிற்றம்பலம்