வானவர் கால அளவை

சதுர்யுகம் ஓரிரண் டாயிரம் பிற்படின்
சதுமுகற் கொருதின மதாம்!
சாற்றும்இத் தினமொன்றி லேயிந்த்ர பட்டங்கள்
தாமும்ஈ ரேழ்சென் றிடும்!
மதிமலியும் இத்தொகையின் அயன்ஆயுள் நூறுபோய்
மாண்டபோ தொருகற் பம்ஆம்!
மாறிவரு கற்பம்ஒரு கோடிசென் றால்நெடிய
மால்தனக் கோர்தி னமதாம்!
துதிபரவும் இத்தொகையில் ஒருகோடி நெடியமால்
தோன்றியே போய்ம றைந்தால்
தோகையோர் பாகனே! நீநகைத் தணிமுடி
துளக்கிடும் கால மென்பர்!
அதிகம்உள பலதேவர் தேவனே! தேவர்கட்
கரசனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
-------------