தூய்மை

வாம்பரி தனக் கதிக புனிதம்முகம் அதனிலே;
மறையவர்க் குயர்பு னிதமோ
மலரடியி லே;புனிதம் ஒளிகொள்கண் ணாடிக்கு
மாசில்முற் புறம்அ தனிலே;
மேம்படும் பசுவினுக் குப்பிற் புறத்திலே;
மிக்கமட மாத ருக்கோ
மேனியெல் லாம்புனிதம் ஆகும்;ஆ சௌசமொடு
மேவுவனி தையர்த மக்கும்
தாம்பிர மதற்கும்மிகு வெள்ளிவெண் கலம்அயம்
தங்கம்ஈ யந்த மக்கும்
தரும்புனிதம் வருபெருக் கொடுபுளி சுணம்சாம்பல்
சாரும்மண் தாது சாணம்
ஆம்புனிதம் இவையென்பர்; மாமேரு வில்லியே!
அனகனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!