தூய்மை

bookmark

வாம்பரி தனக் கதிக புனிதம்முகம் அதனிலே; 
      மறையவர்க் குயர்பு னிதமோ 
மலரடியி லே;புனிதம் ஒளிகொள்கண் ணாடிக்கு 
      மாசில்முற் புறம்அ தனிலே; 
மேம்படும் பசுவினுக் குப்பிற் புறத்திலே; 
      மிக்கமட மாத ருக்கோ 
மேனியெல் லாம்புனிதம் ஆகும்;ஆ சௌசமொடு 
      மேவுவனி தையர்த மக்கும் 
தாம்பிர மதற்கும்மிகு வெள்ளிவெண் கலம்அயம் 
      தங்கம்ஈ யந்த மக்கும் 
தரும்புனிதம் வருபெருக் கொடுபுளி சுணம்சாம்பல்
      சாரும்மண் தாது சாணம் 
ஆம்புனிதம் இவையென்பர்; மாமேரு வில்லியே!
      அனகனே! அருமை மதவேள் 
அனுதினமும் மனதில் நினை தருசதுர கிரிவளர் 
      அறப்பளீ சுரதே வனே!