அடங்காதவற்றை அடக்குவதற்கு வழி

கொடியபொலி எருதைஇரு மூக்கிலும் கயிறொன்று
கோத்துவச விர்த்தி கொள்வார்;
குவலயந் தனின்மதக் களிறதனை அங்குசங்
கொண்டுவச விர்த்தி கொள்வார்;
படியில்விட அரவைமந் திரதந் திரத்தினாற்
பற்றிவச விர்த்தி கொள்வார்;
பாய்பரியை நெடியகடி வாளமது கொடுநடை
பழக்கிவச விர்த்தி கொள்வார்;
விடமுடைய துட்டரைச் சோர்பந்து கைக்கொண்டு
வீசிவச வீர்த்தி கொள்வார்;
மிக்கபெரி யோர்களும் கோபத்தை அறிவால்
விலக்கிவச விர்த்தி கொள்வார்;
அடியவர் துதிக்கவரு செந்தா மரைப்பதத்
தையனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!