அடங்காதவற்றை அடக்குவதற்கு வழி

bookmark

கொடியபொலி எருதைஇரு மூக்கிலும் கயிறொன்று 
      கோத்துவச விர்த்தி கொள்வார்; 
குவலயந் தனின்மதக் களிறதனை அங்குசங் 
      கொண்டுவச விர்த்தி கொள்வார்; 
படியில்விட அரவைமந் திரதந் திரத்தினாற் 
      பற்றிவச விர்த்தி கொள்வார்; 
பாய்பரியை நெடியகடி வாளமது கொடுநடை 
      பழக்கிவச விர்த்தி கொள்வார்; 
விடமுடைய துட்டரைச் சோர்பந்து கைக்கொண்டு 
      வீசிவச வீர்த்தி கொள்வார்; 
மிக்கபெரி யோர்களும் கோபத்தை அறிவால் 
      விலக்கிவச விர்த்தி கொள்வார்; 
அடியவர் துதிக்கவரு செந்தா மரைப்பதத் 
      தையனே! அருமை மதவேள் 
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் 
      அறப்பளீ சுரதே வனே!