நன்று தீதாதல்

வான்மதியை நோக்கிடின் சோரர்கா முகருக்கு
மாறாத வல்வி டமதாம்!
மகிழ்நன் றனைக்காணில் இதமிலா விபசரிய
மா தருக் கோவி டமதாம்!
மேன்மைதரு நற்சுவை பதார்த்தமும் சுரரோகம்
மிக்கபேர்க் கதிக விடமாம்!
வித்தியா திபர்தமைக் கண்டபோ ததிலோப
வீணர்க்கெ லாம்வி டமதாம்!
ஈனம்மிகு புன்கவி வலோர்க் கதிக சபைகாணில்
ஏலாத கொடிய விடமாம்!
ஏற்றமில் லாதபடு பாவிகட்க றமென்னில்
எந்நாளும் அதிக விடமாம்!
ஆனதவ யோகியர்கள் இதயதா மரையுறையும்
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!