தாழ்வும் உயர்வுபெறும்

வெகுமானம் ஆகிலும் அவமானம் ஆகிலும்
மேன்மையோர் செய்யில் அழகாம்!
விரகமே ஆகிலும் சரசமே ஆகிலும்
விழைமங்கை செய்யில் அழகாம்!
தகுதாழ்வு வாழ்வுவெகு தருமங்க ளைச்செய்து
சாரிலோ பேர ழகதாம்!
சரீரத்தில் ஓரூனம் மானம்எது வாகிலும்
சமர்செய்து வரில்அ ழகதாம்?
நகம்மேவு மதகரியில் ஏறினும் தவறினும்
நாளும்அது ஓர ழகதாம்!
நாய்மீதில் ஏறினும் வீழினும் கண்டபேர்
நகைசெய்தழ கன்றென் பர்காண்!
அகம்ஆயும் நற்றவர்க் கருள்புரியும் ஐயனே!
ஆதியே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!