நல்வினை செய்தோர்

bookmark

சாண்எனக் காத்தவன், மெய்யினால் வென்றவன், 
      தானம்இளை யாது தவினோன், 
தந்தைசொல்மறாதவன், முன்னவற் கானவன் 
      தாழ்பழி துடைத்த நெடியோன், 
வருபிதிர்க் குதவினோன், தெய்வமே துணையென்று 
      மைந்தன்மனை வியைவ தைத்தோர், 
மாறான தந்தையைத் தமையனைப் பிழைகண்டு 
      மாய்த்துலகில் மகிமை பெற்றோர் 
கருதரிய சிபிஅரிச் சந்திரன், மாபலி, 
      கணிச்சியோன் சுமித்தி ரைசுதன், 
கருடன், பகீரத னுடன்சிறுத் தொண்டனொடு 
      கானவன், பிரக லாதன், 
அரியவல் விபீடணன் எனும்மகா புருடராம் 
      அத்தனே! அருமை மதவேள் 
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் 
      அறப்பளீ சுரதே வனே!