தீவினை செய்தோர்

bookmark

வாயிகழ்வு பேசிமிகு வாழ்விழந் தோன், சிவனை
      வைதுதன் தலைபோ யினோன், 
மற்றொருவர் தாரத்தில் இச்சைவைத்து உடலெலாம்
      மாறாத வடுவா யினோன், 
தாயத்தி னோர்க்குள்ள பங்கைக் கொடாமலே 
      சம்பத் திகழ்ந்து மாய்ந்தோன், 
தக்கபெரி யோர்தமை வணங்கா மதத்தினால் 
      தந்திவடி வாய்அ லைந்தோன், 
மாயனைச் சபையதனில் நிந்தைசெய் தொளிகொள்நவ
      மணிமுடி துணிந்து மாய்ந்தோன், 
வருநகுட னொடுதக்கன் குருடன் 
      மகன், வழுதி, சிசுபா லனாம்! 
ஆயும்அறி வாளரொடு தேவர்பணி தாளனே! 
      அவனிபுகழ் அருமை மதவேள் 
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் 
      அறப்பளீ சுரதே வனே!