நன்னகர்

வாவிபல கூபமுடன் ஆறருகு சேர்வதாய்,
மலைகாத வழியில் உளதாய்
வாழைகமு கொடுதெங்கு பயிராவ தாய்ச், செந்நெல்
வயல்கள் வாய்க் கால்க ளுளதாய்,
காவிகம லம்குவளை சேரேரி யுள்ள தாய்க்,
கனவர் த்த கர்கள்ம றைவலோர்
காணரிய பலகுடிகள் நிறைவுள்ள தாய், நல்ல
காவலன் இருக்கை யுளதாய்த்,
தேவரா லயம் ஆடல் பாடல் அணி மாளிகை
சிறக்கவுள தாய்ச்சற் சனர்
சேருமிடம் ஆகுமோர் ஊர்கிடைத் ததில் அதிக
சீவனமு மேகி டைத்தால்
ஆவலொ டிருந்திடுவ தேசொர்க்க வாசமென்
றறையலாம்! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!