முழுக்குநாள்

வரும் ஆதி வாரம் தலைக் கெண்ணெய் ஆகாது
வடிவமிகும் அழகு போகும்;
வளர்திங் ளுக்கதிக பொருள்சேரும்; அங்கார
வாரம் தனக்கி டர்வரும்
திருமேவு புதனுக்கு மிகுபுத்தி வந்திடும்;
செம்பொனுக் குயர் அறிவுபோம்;
தேடிய பொருட்சேதம் ஆம்வெள்ளி; சனியெண்ணெய்
செல்வம்உண் டாயு ளுண்டாம்;
பரிகாரம் உளதாதி வாரம் தனக்கலரி;
பௌமனுக் கான செழுமண்
பச்சறுகு பொன்னவற் காம்; எருத் தூளொளிப்
பார்க்கவற் காகும் எனவே;
அரிதா அறிந்தபேர் எண்ணெய்சேர்த் தேமுழுக்
காடுவார்; அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!