மருத்துவன்

bookmark

தாதுப் பரீட்சைவரு காலதே சத்தோடு 
      சரீரலட் சணம்அ றிந்து, 
தன்வந்த்ரி கும்பமுனி தேரர்கொங் கணர்சித்தர் 
      தமதுவா கடம்அ றிந்து 
பேதப் பெருங்குளிகை சுத்திவகை மாத்திரைப் 
      பிரயோக மோடு பஸ்மம் 
பிழையாது மண்டூர செந்தூர லட்சணம் 
      பேர்பெறுங் குணவா கடம் 
சோதித்து, மூலிகா விதநிகண் டுங்கண்டு 
      தூயதை லம்லே கியம் 
சொல்பக்கு வம்கண்டு வருரோக நிண்ணயம் 
      தோற்றியே அமிர்த கரனாய்,
ஆதிப் பெருங்கேள்வி யுடையன் ஆ யுர்வேதன் 
      ஆகும்; எம தருமை மதவேள் 
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் 
      அறப்பளீ சுரதே வனே!