உண்மையுணர் குறி

bookmark

சோதிடம் பொய்யாது மெய்யென்ப தறிவரிய 
      சூழ்கிரக ணம்சாட்சி ஆம்! 
சொற்பெரிய வாகடம் நிசமென்கை பேதிதரு 
      தூயமாத் திரைசாட்சி ஆம்! 
ஆதியிற் செய்ததவம் உண்டில்லை என்பதற் 
      காளடிமை யேசாட்சி ஆம்! 
அரிதேவ தேவனென் பதையறிய முதல்நூல் 
      அரிச்சுவடி யேசாட்சி ஆம்! 
நாதனே மாதேவன் என்பதற் கோருத்ர 
      நமகசம கம்சாட்சி ஆம்! 
நாயேனை ரட்சிப்ப துன்பாரம்! அரியயன் 
      நாளும் அர்ச் சனைசெய் சரணத் 
தாதிநா யகமிக்க வேதநா யகனான 
      அண்ணலே! அருமை மதவேள் 
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் 
      அறப்பளீ சுரதே வனே!