ஊழ்வலி

கடலள வுரைத்திடுவர், அரிபிரமர் உருவமும்
காணும் படிக்கு ரைசெய்வர்,
காசினியின் அளவுபிர மாணமது சொல்லுவார்
காயத்தின் நிலைமை அறிவார்,
விடலரிய சீவநிலை காட்டுவார் மூச்சையும்
விடாமல் தடுத்த டக்கி
மேன்மேலும் யோகசா தனைவிளைப் பார், எட்டி
விண்மீதி னும்தா வுவார்,
தொடலரிய பிரமநிலை காட்டுவார், எண்வகைத்
தொகையான சித்தி யறிவார்,
சூழ்வினை வரும்பொழுது சிக்கியுழல் வார்! அது
துடைக்கவொரு நான்மு கற்கும்
அடைவல எனத்தெரிந் தளவில்பல நூல்சொல்லும்
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!