உயர்வு இல்லாதவை

வேதியர்க் கதிகமாம் சாதியும், கனகமக
மேருவுக்கு அதிக மலையும்,
வெண்திரை கொழித்துவரு கங்கா நதிக்கதிக
மேதினியில் ஓடு நதியும்
சோதிதரும் ஆதவற் கதிகமாம் காந்தியும்,
சூழ்கனற் கதிக சுசியும்
தூயதாய் தந்தைக்கு மேலான தெய்வமும்,
சுருதிக் குயர்ந்த கலையும்,
ஆதிவட மொழிதனக்கதிகமாம் மொழியும், நுகர்
அன்னதா னந்த னிலும்ஓர்
அதிகதா னமுமில்லை என்றுபல நூலெலாம்
ஆராய்ந்த பேரு ரைசெய்வார்!
ஆதவன் பிரமன்விண் ணவர் முனிவர் பரவவரும்
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே.