கெடுவன

bookmark

மூப்பொருவர் இல்லாத குமரிகுடி வாழ்க்கையும், 
      மூதரண் இலாத நகரும், 
மொழியும்வெகு நாயகர் சேரிடமும், வரும்எதுகை
      மோனையில் லாத கவியும் 
காப்பமை விலாததோர் நந்தவன மும்,நல்ல 
      கரையிலா நிறையே ரியும், 
கசடறக் கற்காத வித்தையும், உபதேச 
      காரணன் இலாத தெளிவும், 
கோப்புள விநோதமுடை யோர்அருகு புகழாத 
      கோதையர்செய் கூத்தாட் டமும், 
குளிர்புனல் நிறைந்துவரும் ஆற்றோரம் அதினின்று 
      கோடுயர்ந் தோங்கு தருவும், 
ஆப்பதில் லாததேர் இவையெலாம் ஒன்றாகும் 
      ஐயனே! அருமை மதவேள் 
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் 
      அறப்பளீ சுரதே வனே!