இவையே போதும்

bookmark

பொய்யாத வாய்மையும் சீலமும் சார்ந்துளோர் 
      பூவலம் செயவேண் டுமோ? 
பொல்லாத கொலைகள விலாதநன் னெறியுளோர் 
      புகழ்அறம் செயவேண் டுமோ? 
நையாத காமத்தை லோபத்தை விட்டபேர் 
      நல்லறம் செயவேண் டுமோ? 
நன்மனோ சுத்தியுண் டானபேர் மேலும்ஒரு 
      நதிபடிந் திடவேண் டுமோ?
மெய்யாநின் அடியரைப் பரவுவோர் உன்பதம் 
      விரும்பிவழி படவேண் டுமோ? 
வேதியர் தமைப்பூசை பண்ணுவோர் வானவரை 
      வேண்டி அர்ச் சனைசெய் வரோ? 
ஐயா றுடன்கமலை சோணா சலந்தில்லை 
      அதிபனே! அருமை மதவேள் 
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் 
      அறப்பளீ சுரதே வனே!