அரியர்

bookmark

பதின்மரில் ஒருத்தர்சபை மெச்சிடப் பேசுவோர்! 
      பாடுவோர் நூற்றில் ஒருவர்! 
பார்மீதில் ஆயிரத் தொருவர்விதி தப்பாது 
      பாடிப்ர சங்க மிடுவோர்! 
இதனருமை அறிகுவோர் பதினா யிரத்தொருவர்! 
      இதையறிந் திதயம் மகிழ்வாய் 
ஈகின்ற பேர்புவியி லேஅருமை யாகவே 
      இலக்கத்தி லேயொ ருவராம்! 
துதிபெருக வரும்மூன்று காலமும் அறிந்தமெய்த் 
      தூயர்கோ டியில்ஒ ருவர் ஆம். 
தொல்லுலகு புகழ்காசி யேகாம் பரம்கைலை 
      சூழும்அவி நாசி பேரூர் 
அதிகமுள வெண்காடு செங்காடு காளத்தி 
      அத்தனே! அருமை மதவேள் 
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் 
      அறப்பளீ சுரதே வனே!