தானம்

தானம்

bookmark

ஒருவனுக்கு தாமும் தன்னாலான தான தருமத்தைச் செய்ய வேண்டும் என்று ஆசை வந்தது.

அடுத்த நாளிலிருந்து தினமும் கடுகளவு தங்கம் தானம் செய்ய ஆரம்பித்தான்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு அவன் மனைவி “தினமும் கடுகளவு தங்கம் தானம் செய்வதால் யாருக்கு என்ன லாபம்? தினம் கடுகளவு தங்கம் எடுத்து ஒரு டப்பாவில் போட்டு வைங்க.. மொத்தமாகச் சேர்ந்ததும் அதை உருக்கி யாருக்காவது கொடுக்கலாம்,” என்றாள்.

மனைவி பேச்சைக் கேட்டு அவனும் அவ்வாறே செய்ய ஆரம்பித்தான். கடுகு சைசிலிருந்த தங்கம், போகப்போக விளாம்பழ அளவுக்கு அதிகமாகிக் கொண்டே போனது. அவ்வப்போது உருக்கி உருண்டையாக்கிக் கொண்டே வந்தான்.

ஒருநாள் அவன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையில் விழுந்தான்.  பேச்சு வரவில்லை.

மனைவியின் துர் எண்ணம் புரிந்தது. மறுக்காமல் சாப்பிட ஆரம்பித்தான். விளாம்பழம் தொண்டையில் சிக்கி அவன் இறந்தே போனான்!