நன்மாணாக்கரியல்

bookmark

வைதாலும் ஓர்கொடுமை செய்தாலு மோசீறி 
      மாறாதிகழ்ந் தாலுமோ 
மனதுசற் றாகிலும் கோணாது, நாணாது, 
      மாதாபி தாவெனக்குப் 
பொய்யாமல் நீ யென்று கனிவொடும் பணிவிடை 
      புரிந்து, பொரு ளுடலாவியும் 
புனித! உன்றன தெனத் தத்தஞ்செய் திரவுபகல் 
      போற்றி, மல ரடியில் வீழ்ந்து, 
மெய்யாக வேபரவி உபதேச மதுபெற 
      விரும்புவோர் சற்சீ டராம் 
வினைவேர் அறும்படி அவர்க்கருள்செய் திடுவதே 
      மிக்கதே சிகரதுகடன் 
ஐயா! புரம்பொடி படச்செய்த செம்மலே! 
      அண்ணல்எம தருமை மதவேள் 
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் 
      அறப்பளீ சுரதே வனே!
-----------