கோடி உடுக்கும் நாள்

கறைபடா தொளிசேரும் ஆதிவா ரந்தனிற்
கட்டலாம் புதிய சீலை;
கலைமதிக் காகாது; பலகாலும் மழையினிற்
கடிதுநனை வுற்றொ ழிதரும்;
குறைபடா திடர்வரும்; வீரியம்போம், அரிய
குருதிவா ரந்த னக்கு;
கொஞ்சநா ளிற்கிழியும், வெற்றிபோம் புந்தியில்;
குருவார மதில ணிந்தால்,
மறைபடா தழகுண்டு, மேன்மேலும் நல்லாடை
வரும்; இனிய சுக்கி ரற்கோ
வாழ்வுண்டு, திருவுண்டு, பொல்லாத சனியற்கு
வாழ்வுபோம், மரணம் உண்டாம்;
அறைகின்ற வேதாக மத்தின்வடி வாய்விளங்
கமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!