கோடி உடுக்கும் நாள்

bookmark

கறைபடா தொளிசேரும் ஆதிவா ரந்தனிற் 
      கட்டலாம் புதிய சீலை; 
கலைமதிக் காகாது; பலகாலும் மழையினிற் 
      கடிதுநனை வுற்றொ ழிதரும்; 
குறைபடா திடர்வரும்; வீரியம்போம், அரிய 
      குருதிவா ரந்த னக்கு; 
கொஞ்சநா ளிற்கிழியும், வெற்றிபோம் புந்தியில்; 
      குருவார மதில ணிந்தால், 
மறைபடா தழகுண்டு, மேன்மேலும் நல்லாடை 
      வரும்; இனிய சுக்கி ரற்கோ 
வாழ்வுண்டு, திருவுண்டு, பொல்லாத சனியற்கு 
      வாழ்வுபோம், மரணம் உண்டாம்; 
அறைகின்ற வேதாக மத்தின்வடி வாய்விளங் 
      கமலனே! அருமை மதவேள் 
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் 
      அறப்பளீ சுரதே வனே!