சகுனம் - 1

சொல்லரிய கருடன்வா னரம்அரவம் மூஞ்சிறு
சூகரம் கீரி கலைமான்
துய்யபா ரத்வாசம் அட்டைஎலி புன்கூகை
சொற்பெருக மருவும் ஆந்தை
வெல்லரிய கரடிகாட் டான்பூனை புலிமேல்
விளங்கும்இரு நா உடும்பு
மிகவுரைசெய் இவையெலாம் வலம்இருந் திடமாகில்
வெற்றியுண் டதிக நலம்ஆம்;
ஒல்லையின் வழிப்பயணம் ஆகுமவர் தலைதாக்கல்,
ஒருதுடை யிருத்தல், பற்றல்,
ஒருதும்மல், ஆணையிடல், இருமல், போ கேலென்ன
உபசுருதி சொல்இ வையெலாம்
அல்லல்தரும் நல்லஅல என்பர்; முதி யோர்பரவும்
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!