சகுனம் - 1

bookmark

சொல்லரிய கருடன்வா னரம்அரவம் மூஞ்சிறு 
      சூகரம் கீரி கலைமான் 
துய்யபா ரத்வாசம் அட்டைஎலி புன்கூகை 
      சொற்பெருக மருவும் ஆந்தை 
வெல்லரிய கரடிகாட் டான்பூனை புலிமேல் 
      விளங்கும்இரு நா உடும்பு 
மிகவுரைசெய் இவையெலாம் வலம்இருந் திடமாகில் 
      வெற்றியுண் டதிக நலம்ஆம்; 
ஒல்லையின் வழிப்பயணம் ஆகுமவர் தலைதாக்கல், 
      ஒருதுடை யிருத்தல், பற்றல், 
ஒருதும்மல், ஆணையிடல், இருமல், போ கேலென்ன
      உபசுருதி சொல்இ வையெலாம் 
அல்லல்தரும் நல்லஅல என்பர்; முதி யோர்பரவும் 
      அமலனே! அருமை மதவேள் 
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் 
      அறப்பளீ சுரதே வனே!