சகுனம் - 2

bookmark

நரிமயில் பசுங்கிள்ளை கோழிகொக் கொடுகாக்கை
      நாவிசிக் சிலியோந் திதான் 
நரையான் கடுத்தவாய்ச் செம்போத் துடன்மேதி 
      நாடரிய சுரபி மறையோர்
வரியுழுவை முயலிவை யனைத்தும்வலம் ஆயிடின் 
      வழிப்பயணம் ஆகை நன்றாம்; 
மற்றும்இவை அன்றியே குதிரைஅனு மானித்தல், 
      வாய்ச்சொல்வா வாவென் றிடல், 
தருவளை தொனித்திடுதல், கொம்புகிடு முடியரசு 
      தப்பட்டை ஒலிவல் வேட்டு 
தனிமணி முழக்கெழுதல் இவையெலாம் ஊர்வழி 
      தனக்கேக நன்மை யென்பர்! 
அருணகிர ணோதயத் தருணபா னுவையனைய 
      அண்ணலே! அருமை மதவேள் 
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் 
      அறப்பளீ சுரதே வனே!